தமிழகத்தில் மின்பயனீட்டாளர்களின் எண்ணிக்கை 3.16 கோடியை தாண்டியது – மின்வாரிய அதிகாரி தகவல்!
தமிழகத்தில் கடந்த ஆண்டு வரை குறைவாக இருந்த மின் பயனீட்டாளர்களின் எண்ணிக்கை தற்போது 3.16 கோடியாக அதிகரித்துள்ளதாக மின்சாரவாரியத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மின்வாரியம்:
தமிழகத்தில் புதிய ஆட்சிக்கு பின்னர் பல்வேறு முன்னேற்றப் பணிகள் மற்றும் ஆய்வுகள் நடந்துள்ள துறைகளில் மின்சாரத்துறையும் ஒன்று. கடந்த மாதம் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலஜி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அடுத்த 5 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய வளர்ச்சி திட்டங்கள் குறித்து ஆய்வு செய்து, அவற்றை செயல்படுத்துமாறும் உத்தரவிட்டுள்ளார். பல புதிய திட்டங்களும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டது. அந்த வகையில், தற்போது தமிழக மின்வாரியத்துறையின் அதிகாரிகள் புதிய தகவல்களை தெரிவித்துள்ளனர்.
செப். 23 முதல் புதிய பயண விதிகள், கட்டுப்பாடுகள் – சவூதி அரசின் அறிவிப்பு!
அப்போது, கடந்த 2020ம் ஆண்டு ஜனவரி 31ம் தேதி நிலவரப்படி தாழ்வழுத்த மின் பயனீட்டாளர்கள் பிரிவில் வீடுகளுக்கு 2.12 கோடி இணைப்புகளும், வணிகத்திற்கு 36.44 லட்சம் இணைப்புகளும், தொழிற்சாலைகளுக்கு 7.47 லட்சம் இணைப்புகளும் இருந்தது. மேலும், விவசாயத்திற்கு 21.40 லட்சம் இணைப்புகளும், குடிசைகளுக்கு 11.20 லட்சம் இணைப்புகளும், இதர பிரிவில் 14.17 லட்சம் இணைப்புகளும், உயர் மின் அழுத்த பயனீட்டாளர்களின் எண்ணிக்கை 10,229 என மொத்தமாக 3.3 கோடிக்கும் மேலான மின்இணைப்புகள் இருந்தது.
TN Job “FB Group” Join Now
புதிய மின் இணைப்புகளை மக்கள் தினமும் பல்வேறு பிரிவுகளின் கீழ் பெற்று வருவதால் தற்போது புதிய மின் பயனாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் தமிழகத்தின் மின்நுகர்வும் அதிகரித்துள்ளது. தற்போதைய கணக்கீட்டின் படி, மொத்தமாக 3.16 கோடிக்கும் மேலான மின்இணைப்புகள் உள்ளது. இதற்காக மொத்தம் 93,344 மில்லியன் யூனிட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது. புதிதாக மின்இணைப்பு பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.