இந்தியாவில் மீண்டும் அதிகரித்த கொரோனா பரவல் – 4 கோடியை தாண்டிய பாதிப்பு எண்ணிக்கை!

0
இந்தியாவில் மீண்டும் அதிகரித்த கொரோனா பரவல் - 4 கோடியை தாண்டிய பாதிப்பு எண்ணிக்கை!
இந்தியாவில் மீண்டும் அதிகரித்த கொரோனா பரவல் - 4 கோடியை தாண்டிய பாதிப்பு எண்ணிக்கை!
இந்தியாவில் மீண்டும் அதிகரித்த கொரோனா பரவல் – 4 கோடியை தாண்டிய பாதிப்பு எண்ணிக்கை!

உலகம் முழுவதையும் தலைகீழாக மாற்றி நாட்டில் பெரிய மாற்றத்தையும், உயிர் சேதத்தையும் கொடுத்த கொரோனா வைரஸ் இந்த ஆண்டு மீண்டும் தலைதூக்கி தீவிரமாக பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்துக்குள் நாட்டில் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை, உயிரிழந்தோர் மற்றும் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை விவரத்தை மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கையாக வெளியிட்டுள்ளது.

கொரோனா:

கடந்த 2020 மற்றும் 2021ல் நாட்டையே உலுக்கிய பேரழிவு நோய்த் தொற்று கொரோனா இந்த ஆண்டும் அதன் ஆட்டத்தை தொடங்கியுள்ளது. அவ்விதமாக தற்போது கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியுள்ளது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4 கோடியையும் கடந்து தீவிரமாகி உள்ளது. மேலும், இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்திற்குள் நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகிதம் நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

அதில் கூறியிருந்ததாவது, கொரோனா வைரஸ் பரவலின் தாக்கம் நாட்டில் அதிகரித்து தற்போது மீண்டும் புதிதாக 6,594 பேரை பாதிப்புக்குள்ளாகியுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பின் எண்ணிக்கை அதிகரித்து 4,32,36,695 ஆக உயர்ந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் நோய் தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கையில் கூடுதல் உண்டாகும் விதமாக தற்போது புதிதாக 6 பேர் இறந்துள்ளனர். இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,24,777ஆக உயர்ந்துள்ளது. அதுபோல பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் அநேகர் உள்ளனர். அதில் ஒரே நாளில் 4,035 பேர் குணமடைந்து இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கையும் 4,26,61,370 ஆக உயர்ந்துள்ளது.

சென்னை – மதுரை இடையே அதிவேக ரயில் சேவை? இந்திய ரயில்வே தகவல்!

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 50,548 பேருக்கு மருத்துவமனையில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் அரசு உத்தரவின் படி இந்தியாவில் 195.35 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மேலும், இதை குறித்த விவரங்களை விகித அடிப்படையிலும் கூறியுள்ளனர். அதாவது இந்தியாவில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் விகிதம் 98.67% ஆக உயர்ந்துள்ளதாகவும், உயிரிழந்தோர் விகிதம்1.21% ஆக குறைந்துள்ளதாகவும் சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.11% ஆக குறைந்துள்ளது என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!