பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கதிர் மீண்டும் வீட்டிற்குள் வருவாரா? அடுத்து வரப்போகும் ட்விஸ்ட்!

0
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கதிர் மீண்டும் வீட்டிற்குள் வருவாரா? அடுத்து வரப்போகும் ட்விஸ்ட்!
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கதிர் மீண்டும் வீட்டிற்குள் வருவாரா? அடுத்து வரப்போகும் ட்விஸ்ட்!
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கதிர் மீண்டும் வீட்டிற்குள் வருவாரா? அடுத்து வரப்போகும் ட்விஸ்ட்!

விஜய் டிவியில் டாப் சீரியல்களில் ஒன்றாக பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் உள்ளது. கிட்டதட்ட 1000 எபிசோட்களை இந்த சீரியல் நெருங்கி வருகிறது. இந்த சீரியலில் கடந்த சில நாட்களாகவே சண்டை, கண்ணீர், சென்டிமென்ட் என சென்று கொண்டிருக்கிறது. இதனால் அடுத்து என்ன நடக்க போகிறது என்ற பதைபதைப்புடன் ரசிகர்கள் ஆர்வமாக சீரியலை பார்த்து வருகிறார்கள்.

ட்விஸ்ட் எபிசோட்:

விஜய் டிவியில் பாப்புலரான, அதிகமானவர்களால் பார்க்கப்படும் சீரியல்களில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலும் ஒன்று. இந்த சீரியல் கூட்டுக் குடும்ப பாசம், அண்ணன் – தம்பி ஒற்றுமையை மையமாக கொண்டு நகர்கிறது. அதாவது தனத்தின் பிறந்தநாளுக்காக சொந்தக்காரர்கள் வீட்டிற்கு வந்தனர். அப்போது மீனாவின் அப்பா ஜனார்த்தனன், கதிரை மோசமாக திட்டி, சண்டை போடுகிறார். கதிரை, ஜனார்த்தனன் அவமானப்படுத்திய தகவல் தெரிந்து, முல்லையின் பெற்றோர், ஜனார்த்தனனிடம் சண்டை போடுகிறார்கள்.

TN Job “FB  Group” Join Now

முல்லையின் பெற்றோர், மீனாவின் பெற்றோர், தனத்தின் பெற்றோர் என அனைவரும் மாறி மாறி பேசுவதால் சண்டை பெரிதாகிறது. இதனால் என்ன செய்வதென தெரியாமல் கோபத்தில் முல்லையை அழைத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே செல்கிறார் கதிர். வழியில் கதிரை பார்த்து, தனது வீட்டிற்கு அழைத்து செல்கிறார் மாமனார் முருகன். இதனால் மனம் உடைந்த, சத்தியமூர்த்திக்கு நெஞ்சுவலி ஏற்படுகிறது. இதனால் பதறிப் போய் ஜீவா, கண்ணனை கூப்பிடுகிறார் தனம். சத்யமூர்த்தியை மருத்துவமனையில் அனுமதிக்கிறார்கள்.

கண்ணம்மா மீது பழி சுமத்தி மருத்துவமனையை விட்டு விரட்டும் கணேசன் – நிம்மதியில் பாரதி! ப்ரோமோ ரிலீஸ்!

மேலும் மூர்த்திக்கு 2 ஆப்ரேஷன் கட்டாயம் செய்ய வேண்டும் என டாக்டர் கூறிவிட்டார். இதையடுத்து மூர்த்தியைப் பார்க்க வந்த கதிரிடம் தனம் வீட்டுக்கு வரும்படி கெஞ்சுகின்றார். ஆனால் கதிரோ, நான் கடனை கட்டாமல் வீட்டுக்கு வரமாட்டேன் என மறுத்து விடுகிறார். இதனால் கோபம் அடைந்த தனம் கதிரை, ஹாஸ்ப்பிடலை விட்டு வெளியே போக சொல்லிவிட்டார். மேலும் டாக்டர், மூர்த்திக்கு ஆபரேஷன் முடிந்துவிட்டது. இனி ஒன்றும் இல்லை, 2 மாதங்கள் ரெஸ்ட் எடுக்க வேண்டும் என கூறுகிறார்.

இதெல்லாம் பார்த்து கொண்டு இருந்த கதிர் தன்னால்தான் அண்ணனுக்கு இப்படி ஆயிடுச்சு என குற்ற உணர்ச்சியில் தவிக்கிறார். அப்போது ஜீவா , நீ அண்ணா கிட்ட போய் பேசு எல்லாம் நல்லா சரியாகிவிடும் என கூறுகிறார். இதை கேட்டு கதிர், அண்ணாவிற்காக மீண்டும் வீட்டுக்கு வருவரா? இனி அடுத்து என்ன நடக்கும், பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் மீண்டும் ஒன்று சேருமா என்பது தான் ரசிகர்களின் தற்போதைய எதிர்பார்ப்பாக உள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!