விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் அடுத்த திருப்பம் – எழில், அமிர்தா காதலுக்கு வில்லியாகும் ஈஸ்வரி?

0
விஜய் டிவி 'பாக்கியலட்சுமி' சீரியலில் அடுத்த திருப்பம் - எழில், அமிர்தா காதலுக்கு வில்லியாகும் ஈஸ்வரி?
விஜய் டிவி 'பாக்கியலட்சுமி' சீரியலில் அடுத்த திருப்பம் - எழில், அமிர்தா காதலுக்கு வில்லியாகும் ஈஸ்வரி?
விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் அடுத்த திருப்பம் – எழில், அமிர்தா காதலுக்கு வில்லியாகும் ஈஸ்வரி?

விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் எழில் மற்றும் அமிர்தாவின் காதல் கதையை பாக்கியா அறிந்து கொள்ள, வீட்டில் உள்ள மற்றவர்களுக்கு இந்த விஷயம் தெரிய வந்தால் எழில் எப்படி அவர்களை சமாளிப்பார் என்பது அடுத்தகட்ட கதைக்களமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

பாக்கியலட்சுமி சீரியல்

இன்றைய காலத்தில் ஒளிபரப்பப்படும் பல சீரியல்கள் ஏதாவதொரு சமூக கருத்துக்களை முன்வைப்பதாக எடுக்கப்பட்டு வருகிறது. இது போன்ற கதைக்களங்களுக்கு மக்கள் அதிகளவு ஆதரவும் கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் சமூக நீதிகளை சொல்லும் பாணியை சீரியலின் ஒரு அங்கமாக கொண்டுள்ள விஜய் டிவியின் ‘பாக்கியலட்சுமி’ சீரியலுக்கு மக்கள் ஏகப்பட்ட வரவேற்புகளை கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் இந்த சீரியலில் இல்லத்தரசி பாக்கியா தொழில் முனைவோர் ஆவது, பாலியல் சீண்டல்கள் உள்ளிட்ட பல விஷயங்கள் ரசிகர்களிடம் இருந்து கிளாப்ஸ் அள்ளியது.

Exams Daily Mobile App Download

இந்த வரிசையில் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் அடுத்து முக்கியத்துவப்படுத்தப்படும் கதையாக எழில் மற்றும் அமிர்தாவின் திருமணம் இருக்கப்போகிறது என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இதுவரை ஒளிபரப்பாகி இருக்கும் பாக்கியலட்சுமி எபிசோடில் எழில், அமிர்தாவை காதலிப்பதாக சந்தேகப்படும் ஈஸ்வரி, அமிர்தாவை காதலிக்கக்கூடாது என சொல்லி எழிலிடம் சத்தியம் வாங்குகிறார். மறுபக்கத்தில், அமிர்தாவை காதலிக்கும் உண்மையை பாக்கியாவிடம் சொல்லி விடுகிறார் எழில். இப்போது பின்விளைவுகளை அறியாமல் எழிலின் காதலுக்கு பாக்கியா உறுதுணையாக இருப்பதாக கூறுகிறார்.

எழில் அம்ரிதாவை காதலிப்பதை குடும்பத்தினரிடம் போட்டுடைத்த செழியன் – ப்ரோமோ ரிலீஸ்!

இதற்கிடையில் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் அடுத்து வரும் கதைக்களம் எழில் மற்றும் அமிர்தாவின் திருமணம் தொடர்பானதாக இருக்கும் என்று கணிப்புகள் எழுந்திருக்கிறது. இப்போது அமிர்தா வெறும் தோழி என்று எழில் சொன்னதை வீட்டில் உள்ள எல்லாரும் ஏற்றுக்கொள்கின்றனர். ஆனால், இந்த உண்மை வெளியே வரும் போது கண்டிப்பாக எழிலின் காதலுக்கு வில்லியாக ஈஸ்வரி இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால், அமிர்தா எழிலுடன் பழகுவதை பிடிக்காத ஈஸ்வரி கண்டிப்பாக இந்த காதலுக்கு எஸ் சொல்லமாட்டார்.

இதற்கு காரணம் அமிர்தா ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பதால் தான். மறுபக்கத்தில் பெரிதாக ஒன்றும் செய்ய முடியாவிட்டாலும் செழியனும், எழிலுக்கு எதிராக மாறுவார் என்பதில் சந்தேகமில்லை. இதற்கிடையில், கோபியின் காதல் விஷயம் எழிலுக்கு தெரியும் என்பதால் அவர் சேம் சைடு கோல் அடிக்க வாய்ப்புள்ளது. இப்போது, குடும்பத்தில் இருந்து வரும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் எழில் அமிர்தாவை திருமணம் செய்துகொள்வாரா, இல்லை குடும்பத்திற்காக அவரை விட்டுக்கொடுப்பாரா என்ற கதைக்களத்துடன் பாக்கியலட்சுமி சீரியல் பயணிக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!