விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் அடுத்த ட்விஸ்ட் – எழிலை சந்திக்கும் அமிர்தா!
பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது தான் கோபி கையும் களவுமாக பிடிபட்டுள்ளார். அடுத்ததாக எழில் அம்ரிதாவை சந்தித்து திருமணம் குறித்து பேசும்படியான ஷூட்டிங் காட்சிகள் சமூக வலை பக்கங்களில் வைரலாகி வருகிறது.
பாக்கியலட்சுமி:
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள், நிகழ்ச்சிகள் என அனைத்துமே மக்களின் மத்தியில் நல்ல ஒரு இடத்தை பிடித்து வருகிறது. டிஆர்பியிலும் இந்த விஜய் தொலைக்காட்சி சீரியல்கள் தான் முதல் 5 இடத்தை பிடித்து வருகிறது. அதிலும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி சீரியலை தான் மக்கள் அதிகமாக விரும்பி பார்த்து வருகின்றனர். இத்தனை நாட்களாக கோபி ராதிகாவிடமும் பாக்கியாவிடமும் மாட்டிக்கொள்வாரா என எதிர்பார்த்து காத்து கொண்டிருந்தனர். ரசிகர்களின் விருப்பத்தின் பேரில் தற்போது கோபி ராதிகாவிடம் கையும் களவுமாக மாட்டிக்கொண்டுள்ளார்.
Exams Daily Mobile App Download
இதற்கு பிறகு கோபியை விட்டு ராதிகா முழுமையாக விலகுவாரா அல்லது கோபிக்கு பாக்கியாவை விட நம்மை தானே பிடித்திருக்கிறது என நினைத்து கோபியை ஏற்றுக்கொள்வாரா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்க ஆரம்பித்துவிட்டனர். தற்போதைக்கு ராதிகாவிற்கு மட்டுமே கோபியை பற்றிய உண்மைகள் தெரிந்திருக்கிறது. பாக்கியாவிற்கு கோபி மீது லேசாக சந்தேகம் மட்டுமே வந்துள்ளது. பாக்கியாவிற்கு உண்மைகள் தெரிந்தால் என்னென்ன செய்ய போகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். கோபியின் காதல் ஒரு புறம் இருக்க மறுபுறம் அம்ரிதாவை திருமணம் செய்ய வேண்டும் என எழில் சுற்றி கொண்டிருக்கிறார்.
ராதிகா பற்றிய உண்மையை கோபி போனில் பார்த்து தெரிந்து கொண்ட பாக்கியா? இன்றைய எபிசோட்!
தற்போது எழில் அம்ரிதாவை சந்தித்து பேசும்படியான ஷூட்டிங் காட்சிகள் சமூக வலை பக்கங்களில் வைரலாகி வருகிறது. இன்னும் சில நாட்களில் எழில் மற்றும் அம்ரிதா இருவரின் திருமண எபிசோடுகள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஷூட்டிங் நடக்கும் போது கூட அம்ரிதாவை அந்த குட்டி பாப்பா விடாமல் கொஞ்சி கொண்டிருக்கிறார். எப்போதும் அம்ரிதாவை அம்மா அம்மா என்று அழைத்துக்கொண்டு அம்ரிதாவுடன் விளையாடும்படியான வீடியோவை ரித்திகா யூடியூப் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.