பாரதி கண்ணம்மா சீரியலில் அடுத்த ட்விஸ்ட் – வெண்பா, துர்காவிற்கு நடந்த திருமணம்!
பாரதி கண்ணம்மா சீரியலில் வெண்பாவின் அம்மாவாக நடிக்கும் ரேகாவின் என்ட்ரிக்கு பிறகு சீரியல் கலகலப்பாக பயணிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் வெண்பாவை துர்கா கல்யாணம் செய்வது போன்ற ப்ரோமோ வெளியாகியுள்ளது.
ப்ரோமோ வெளியீடு:
தமிழ் சீரியல்களில் மக்களின் வரவேற்புகளை பெற்று முன்னணி இடத்தை வகித்திருக்கும் பாரதி கண்ணம்மா இல்லதரசிகளை அதிகம் கவர்ந்து வருகின்றது.ஒவ்வொரு நாளும் வித்தியாசமான கதைக்களத்துடன் வெளியாகி கொண்டிருக்கும் இந்த சீரியலில் கடந்த சில தினங்களாக பாசப்போராட்டம் நிகழ்ந்து கொண்டிருக்கின்றது. இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில், அருண் பிரசாந்த் மற்றும் வினுஷா தேவி நடித்துள்ளார். மேலும் வில்லி கதாபாத்திரத்தில் வெண்பா நடித்து வருகிறார். நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும்போது கூட இந்த சீரியலில் இருந்து விலகாமல் குழந்தை பிறந்த பிறகும் தொடர்ந்து நடித்து வருகிறார் வெண்பா.
Exams Daily Mobile App Download
கடந்த 8 வருடங்களாக பாரதியையும் கண்ணம்மாவையும், பல வில்லதனங்களை செய்து பிரித்து வைத்துள்ளார். ஆனால் வெண்பா எதற்காக இப்படியெல்லாம் செய்தாரோ அந்த ஆசை கடைசி வரை நிறைவேறவில்லை. பாரதியை கல்யாணம் செய்துக் கொள்ள தான் வெண்பா காத்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் வெண்பாவின் அம்மா கதாபாத்திரத்தில் நடிகை ரேகா களம் இறங்கி உள்ளார். இவருடைய கதாபாத்திரம் தற்போது நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. வெண்பாவின் அம்மா, அமெரிக்காவில் இருந்து சென்னைக்கு வந்த வந்த முதல் நாளே பாரதியிடம் போய் பேசினார். ஆனால் பாரதி இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. வெண்பாவை கூப்பிட்டு சரமாரியாக திட்டி விடுகிறார்.
பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து விலகும் அருண் – இனி இவருக்கு பதில் இவரா? ரசிகர்களுக்கு ஷாக் நியூஸ்!
அதுமட்டுமில்லை, வெண்பாவை இனிமேல் கல்யாணம் செய்துக் கொள்ள மாட்டேன் என அடித்துக் கூறுகிறார். வெண்பாவிடமும் நீ வேற யாரையாவது திருமணம் செய்து கொள் என்கிறார். இந்நிலையில் நான் சொல்லும் மாப்பிள்ளையை வெண்பா திருமணம் செய்து கொள்ள வேண்டும் என சர்மிளா கண்டிஷன் போடுகிறார். அதனால் வெண்பா வேறு வழி இல்லாமல் சரி என சொல்கிறார். பாரதி கண்ணம்மா பிரச்சனையை விட வெண்பாவிற்கு இப்போது வந்துள்ள பிரச்சனை தான் பெரியதாகஇருக்கப் போகிறது. இந்நிலையில் வெண்பா , துர்காவை திருமணம் செய்து கொள்வது போல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. இதை பார்த்து ரசிகர்கள் அதிக மகிழ்ச்சியில் உள்ளனர். இதற்கு பின்னராவது பாரதியும் கண்ணம்மாவும் ஒன்று சேருவார்கள் என்று சமூகவலைத்தளத்தில் கமெண்ட் செய்து வருகின்றனர்.