திருமண மண்டபத்திற்குள் நுழைந்து கோபியை துவம்சம் செய்த எழில்.. பாக்கியலட்சுமியில் அடுத்த ட்விஸ்ட்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், திருமணத்தை நிறுத்த முடியாமல் வீட்டிற்கு வந்த ராமமூர்த்தி குடும்பத்திடம் நடந்ததை சொல்ல, உடனே இனியா, எழில், செழியன் என அனைவரும் கிளம்பி மண்டபத்திற்கு செல்கின்றனர். அங்கே கோபி பாடு திண்டாட்டமாக இருக்க போகிறது.
பாக்கியலட்சுமி
பாக்கியலட்சுமி சீரியலில், தன்னுடைய கணவர் கல்யாணமாக இருந்தாலும் பாக்கியா கண்டிப்பாக கிடைத்த வாய்ப்பை சரியாக செய்வேன் என சொல்லி, சமையல் வேலைகளை கவனிக்கிறார். ஆனால் பாக்கியாவை வேலை செய்யவிடாமல் கோபி அடிக்கடி குறுக்கே வந்து குத்திக் காட்டுவது போல பேச, ஆனால் அதை எல்லாம் காதில் வாங்காத பாக்கியா, இந்த ஆர்டரை நல்லபடியாக செய்து முடிக்க வேண்டும் என நினைக்கிறார். மறுபக்கம் நடந்ததை எல்லாம் நினைத்து ராதிகா வருத்தப்பட, கோபி என்ன நடந்தாலும் நான் துணையாக இருப்பேன் என வாக்கு கொடுக்கிறார்.
இந்நிலையில் மறுநாள் திருமண ஏற்பாடுகள் நடைபெற இருக்கும் நிலையில், ராமமூர்த்தி திருமணத்தை நிறுத்த முடியாமல் வீட்டிற்கு செல்கிறார். அங்கே அவர் பதட்டமாக இருப்பதை பார்த்து ஈஸ்வரி என்ன நடந்தது என கேட்கிறார். உடனே ராமமூர்த்தி நடந்ததை எல்லாம் சொல்ல, அதை எல்லாம் கேட்ட இனியா என் டாடி அப்படி எல்லாம் செய்யமாட்டார் என சொல்கிறார்.
பாரதி – வெண்பா திருமணம் தான் பாரதி கண்ணம்மா தொடரின் முடிவு? கதையை கேட்டு கோவத்தில் ரசிகர்கள்!
Exams Daily Mobile App Download
மேலும் நான் இப்பவே டாடியை பார்க்க வேண்டும் என இனியா கிளம்ப, மறுபுறம் எழில் இத்தனை நாள் அம்மா முகத்திற்காக தான் அமைதியாக இருந்தேன். இனிமேல் அப்படி இருக்க முடியாது, அவரை என்ன செய்கிறேன் பாருங்கள் என சொல்லிவிட்டு அவரும் மண்டபத்திற்கு கிளம்புகிறார். செழியன், இனியா, எழில் என அனைவரும் மண்டபத்திற்கு சென்று கோபியை திருமணம் கோலத்தில் பார்த்து அதிர்ச்சி அடைகின்றனர். உடனே எழிலிற்கு பயங்கரமாக கோவம் வர அவர் கோபியை எச்சரித்து திருமணத்தை நிறுத்த சொல்லி பேசுகிறார். பெற்ற மகனே இப்படி பேச இனி வரும் எபிசோடுகளில் கோபி பாடு திண்டாட்டமாக இருக்க போகிறது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்