‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் அடுத்து நடக்கவிருக்கும் அதிர்ச்சிகர விஷயம் – அடுத்து வரும் எபிசோட்!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல், திங்கள் முதல் சனி வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. இது அண்ணன் தம்பிகள் 4 பேரைச் சுற்றி அமையும் கதைக்களம் ஆகும்.சில வாரங்களாகவே முல்லை-கதிர் பற்றிய எபிசோடுகள் ஒளிபரப்பட்டு வருகிறது. இதனால் சீரியலின் டிஆர்பி ரேட்டிங் குறைந்து உள்ளது. இதை அடுத்து திடீரென ஐஸ்வர்யா கர்ப்பமாவதை போல அடுத்தகட்ட கதைக்களம் வெளியாக இருப்பதாக தகவல்கள் பெறப்பட்டுள்ளது.
அடுத்து வரப்போகும் ட்விஸ்ட்:
விஜய் தொலைக்காட்சியில், ரசிகர்களை பெரிதும் ஈர்க்கும் பல சீரியல்கள் ஸ்டார் விஜய் டிவி-யில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. சீரியலில் தொடர்ந்து முல்லையின் குழந்தை பிறப்பு குறித்த காட்சிகள் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. முல்லைக்கு குழந்தை பிறக்காது என மருத்துவர் கூறிவிட, குழந்தை பிறப்பதற்காக, முல்லை மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகிறார். அந்த வகையில் அவரை குடும்பத்தில் உள்ள அனைவரும் பாதுகாப்பாக கவனித்து வருகின்றனர். மறுபக்கத்தில், குழந்தை பிறப்பதற்கான சிகிச்சை முடித்து உண்மையில் தனது வயிற்றில் குழந்தை இருப்பது போல முல்லை எண்ணிக்கொள்கிறார்.
இதை தனது அம்மா, அப்பாவிடம் சொல்லி சந்தோஷப்படுகிறார் முல்லை. இப்போது முல்லை கூறுவதை கேட்கும் போது, எங்கே முல்லைக்கு குழந்தை பிறக்காமல் பொய் விடுமோ, அப்படி நடந்தால் முல்லை எப்படி அதை தங்கிக்கொள்வார் என்று வேறு கோணத்தில் சிந்திக்க துவங்கி விட்டார் கதிர். இதனால், முல்லைக்கு குழந்தை பிறக்குமா என்ற சந்தேகத்திலேயே சீரியலின் கதை சென்று கொண்டிருக்கிறது. மேலும் முல்லைக்கு குழந்தை உருவாக உள்ளது என அனைவரும் காத்திருக்கின்றனர். இதற்கிடையில் முல்லைக்கு திடீரென்று வயிற்று வலி வர ஆரம்பித்தவுடன், தனம் அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறார்.
அப்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்திற்கு பேரிடியாய் ஒரு செய்தியை டாக்டர் கூறிவிடுகிறார், அதாவது முல்லைக்கு செய்த வந்த சிகிச்சை தோல்வி அடைந்ததாக கூறிவிடுகிறார். இதனால் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பமே சோகத்தில் உள்ளது. இந்த சீரியல் முல்லை -கதிர் குழந்தை பிறப்பு நோக்கியே செல்வதால், டிஆர்பி ரேட்டிங் ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. இந்நிலையில் தற்போது மீண்டும் மெகா சங்கமம் தொடங்க உள்ளதால், டிஆர்பி ரேட்டிங் உயர வாய்ப்பு இருக்கும் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். இந்நிலையில் சீரியலில் அடுத்து, ஐஸ்வர்யா கர்ப்பமாகி முல்லைக்கு அதிர்ச்சி கொடுப்பது போலவும் அடுத்தகட்ட கதைக்களம் இருக்கலாம் என்றும் தெரிகிறது. அப்படி ஒருவேளை ஐஸ்வர்யா கர்ப்பமானால் இதன் மூலம் கண்டிப்பாக முல்லைக்கு புதிய பிரச்சனைகள் உருவாகும். இந்த காட்சிகளுடன் தான் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் அடுத்த கட்டத்திற்கு நகர இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.