கோபிக்கு வர போகும் அடுத்த பிரச்சனை , நன்றாக பேசிய ராமமூர்த்தி தாத்தா- பாக்கியலட்சுமியில் அடுத்த வாரம்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் போலீஸ் கேஸ்ஸில் இருந்து பாக்கியா தப்பித்து வெளியே வருவாரா என ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர். இந்நிலையில் அடுத்த வார எபிசோட்களில் பெரிய திருப்பம் ஒன்று வர இருக்கிறது. அதனால் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கின்றனர்.
பாக்கியலட்சுமி:
இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், அதிரடி திருப்பம் வர இருக்கிறது. இந்த வாரம் பாக்கியாவின் சாப்பாட்டை சாப்பிட்டு குழந்தைகளுக்கு உடம்பு சரியில்லாமல் போக அதனால் பாக்கியாவும் ராதிகாவும் போலீஸ் ஸ்டேஷனில் இருக்கின்றனர். பாக்கியா தன் மீது எந்த தவறும் இல்லை என சொல்லியும் கூட ராதிகா நம்பவில்லை. அதனால் பாக்கியா அதிர்ச்சியில் இருக்கிறார். எழில் எப்படியாவது அம்மாவை காப்பாற்ற வேண்டும் என நினைத்து எல்லா இடங்களிலும் விசாரணை செய்கிறார்.
கோவத்தில் வெண்பா மீது தண்ணீர் ஊற்றிய ஷர்மிளா – “பாரதி கண்ணம்மா” சீரியலில் அடுத்த எபிசோட்!
அதன் மூலம் உண்மையை கண்டுபிடிக்க அதனால் பாக்கியா மீது குற்றம் எதுவும் இல்லை என நிரூபிக்கப்படுகிறது. பாக்கியா வெளியே வந்தாலும் ராதிகா தன்னை நம்பாமல் இருந்ததை நினைத்து கோவமாக இருக்கிறார். அதனால் கோபிக்கு மிகவும் சந்தோஷமாகிறது. கோபி இனிமேல் பாக்கியாவிடம் சிக்க வாய்ப்பில்லை என சந்தோஷத்தில் இருக்கிறார். இப்படியே கதை சென்றால் கோபி எப்படி மாட்டிக் கொள்வார் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கும் நிலையில் பெரிய திருப்பம் வர போகிறது.
பெண்களுக்கு சொந்தமாக தொழில் தொடங்க ரூ.2 லட்சம் வரை கடன் – விண்ணப்பிப்பதற்கான எளிய வழிமுறைகள்!
அதாவது பாக்கியாவின் பிரச்சனைக்கு பின் ராமமூர்த்தி நல்ல உடல் நிலை தேறி வருகிறார். அவரால் பழையபடி பேச முடிகிறது. அதனால் கோபிக்கு பழையபடி பிரச்சனை காத்துக் கொண்டிருக்கிறது. அப்பாவிற்கு பயந்து கோபி திருந்துவாரா அல்லது மீண்டும் அவர் ராதிகாவை திருமணம் செய்ய போகும் முயற்சியில் இறங்க போகிறாரா என்பது எல்லாம் பொறுத்திருந்து பார்க்கலாம். மேலும் இந்த எபிசோடுகளை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர்.