மூர்த்தி ஆபரேசனுக்கு பணம் கிடைக்காமல் அலையும் ஜீவா – ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ அடுத்த எபிசோட்!

0
மூர்த்தி ஆபரேசனுக்கு பணம் கிடைக்காமல் அலையும் ஜீவா - ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ அடுத்த எபிசோட்!
மூர்த்தி ஆபரேசனுக்கு பணம் கிடைக்காமல் அலையும் ஜீவா - ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ அடுத்த எபிசோட்!
மூர்த்தி ஆபரேசனுக்கு பணம் கிடைக்காமல் அலையும் ஜீவா – ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ அடுத்த எபிசோட்!

விஜய் டிவியில் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். சமீப காலங்களாக பாண்டியன் ஸ்டோர் சீரியலில் ஏராளமான திருப்பங்கள் இருந்து வருகிறது. அந்த வகையில் தற்போது மூர்த்திக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு பதட்டமான சூழ்நிலையில் உள்ளார். இனி அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

விஜய் தொலைக்காட்சியில் 2018ம் ஆண்டு முதல் ஒளிபரப்பப்பட்டு வரும் தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ், இது ப்ரைம் டைமில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த தொடர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ளது. குடும்பத்தில் மீனா அப்பாவால் வந்த சண்டையால் கதிர் தனது மனைவியை கூட்டிக்கொண்டு இரவு நேரத்தில் வீட்டை விட்டு கோபத்துடன் வெளியே சென்றுவிட்டனர். கதிர் – முல்லை வீட்டை விட்டு போன அன்று இரவே மூர்த்திக்கு நெஞ்சு வலி வந்து விட்டது. தூக்கத்தில் கத்திய அவரை உடனடியாக ஆஸ்பிட்டல் அழைத்து வந்தனர்.

TN Job “FB  Group” Join Now

பின்பு நெஞ்சு வலி என்று ஆஸ்பிட்டலில் அட்மிட் செய்துள்ளனர். 2 ஆப்ரேஷன் கட்டாயம் செய்ய வேண்டும் என டாக்டர் கூறிவிட்டார். தனம் ஆஸ்பிட்டலில் இருந்தப்படியே அழுது துடிக்கிறார். அவருக்கு ஆறுதலாக ஜீவாவும் கண்ணனும் உடன் இருக்கிறார்கள். கதிருக்கு இந்த விஷயம் தெரியாது. அதுமட்டுமில்லை கதிர் – முல்லையும் அங்கு மூர்த்தி தனத்தை பற்றிதான் பேசிக் கொண்டிருக்கிறார்கள். மேலும் மூர்த்திக்கு ஆபரேஷன் செய்ய தனத்திடம் கையெழுத்து வாங்கப்படுகிறது. ஐ.சி.யூவில் இருக்கும் மூர்த்தியை பார்த்து அழுது துடிக்கிறார் தனம். மேலும் ஆப்ரேஷனுக்கு அதிகமான பணம் தேவைப்படுகிறது.

10ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – தேர்வு முடிவுகள் வெளியீடு!

இதனால் ஜீவா பணத்தை ரெடி பண்ண அலைந்து கொண்டு இருந்தார். ஆனால் எங்கேயும் பணம் கிடைக்கவில்லை, இந்நிலையில் மீனா என்கிட்ட பணம் இருக்கு அத வாங்கிட்டு போய் மாமா ஆபரேஷனுக்கு ஏற்பாடு பண்ணு என சொல்கிறார். அதை கேட்டு ஆத்திரமடைந்த ஜீவா உன் அப்பா தான் எல்லா பிரச்சனைக்கும் காரணம் உன் பணம் வேண்டாம் என சொல்லிவிட்டு சென்று விட்டார். மேலும் ஜீவா, தனத்திடம் பணம் ரெடி பண்ண முடியல அண்ணி என சொல்ல, அவர் போட்டு இருந்த நகைகளை கொடுத்து இத வச்சு பணம் ரெடி பண்ணு என்று கூறுகிறார். இனி அடுத்து என்ன நடக்கும் என்பதை வரும் எபிசோடில் பார்க்கலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!