தமிழக பத்திரப்பதிவு துறையில் வரப்போகும் புதிய மாற்றம் – இனி அந்த விஷயத்துக்கு வாய்ப்பே இல்லை! அமைச்சர் பேட்டி!
தமிழக பத்திரப்பதிவு செய்யும் போது காலதாமதம் ஆவதாகவும், பல்வேறு முறைகேடுகள் நடப்பதாகவும் புகார்கள் எழுந்து வருகிறது. இந்த நிலையில் பத்திரப்பதிவு துறை அமைச்சர் மதுரையில் ஆய்வு நடத்தினார். இதன் பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
காலதாமதம்:
தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு மற்ற துறைகளை தொடர்ந்து பத்திரப்பதிவு துறையிலும் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. அந்த வகையில் மோசடியான பத்திரப்பதிவுகளை தடுக்கும் வகையில் தமிழக சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டது. அதாவது மோசடி பதிவுகளை ரத்து செய்யும் அதிகாரத்தை பதிவு அலுவலர்களுக்கு வழங்கும் வகையில் சட்டம் திருத்தம் செய்யப்பட்டது. இந்த சட்ட மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்குப் பிறகு குடியரசு தலைவருக்கு அனுப்பபட்டது. தற்போது குடியரசு தலைவரும் இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளார்.
தமிழகத்தில் மதுபான பாட்டில் திரும்ப பெரும் திட்டம் – அக்.11 நீதிமன்ற உத்தரவு!
அதனை தொடர்ந்து தற்போது அனைத்து பத்திரப்பதிவு அலுவலகங்களில் பத்திர பத்திரப்பதிவானது ஆன்லைன் வாயிலாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பல்வேறு குற்றசாட்டுகளும் எழுந்து வருகிறது. அதாவது திடீரென ஆன்லைன் பதிவு முறையில் சர்வர் பிரச்சனை ஏற்படுவதாவும். இதனால் பத்திரப்பதிவு நடைபெறுவதில் காலதாமதம் ஏற்படுவதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். மேலும் இடைத்தரகர்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுவதாகவும் கூறினார்.
Exams Daily Mobile App Download
இந்த நிலையில் மதுரை ஒத்தக்கடையில் ஒருங்கிணைந்த பத்திரப்பதிவு அலுவலகத்தில், பத்திரப்பதிவு துறை அலுவலகத்தில் அமைச்சர் ஆய்வு நடத்தினார். அப்போது பேசிய அவர் போலி பத்திர பதிவுகளை பதிவு அலுவலர் ரத்து செய்யும் சட்டம் ஒரு வாரத்தில் அமலுக்கு வர உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் பத்திரப்பதிவு துறையில் உள்ள குறைகள் விரைவில் சரி செய்யப்படும். மேலும் முறைகேடு தொடர்பாக ஆதாரத்துடன் புகார் வந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்