திருப்பதி தரிசனம் செல்ல திட்டமிடுவோருக்கு முக்கிய அறிவிப்பு – பிப்ரவரி மாத டிக்கெட்! இன்று வெளியீடு!

0
திருப்பதி தரிசனம் செல்ல திட்டமிடுவோருக்கு முக்கிய அறிவிப்பு - பிப்ரவரி மாத டிக்கெட்! இன்று வெளியீடு!
திருப்பதி தரிசனம் செல்ல திட்டமிடுவோருக்கு முக்கிய அறிவிப்பு - பிப்ரவரி மாத டிக்கெட்! இன்று வெளியீடு!
திருப்பதி தரிசனம் செல்ல திட்டமிடுவோருக்கு முக்கிய அறிவிப்பு – பிப்ரவரி மாத டிக்கெட்! இன்று வெளியீடு!

பிப்ரவரி மாதம் திருப்பதி பெருமாள் கோயிலுக்கு தரிசனத்திற்கு செல்லும் பக்தர்களுக்கு இன்று சிறப்பு தரிசனத்துக்கான டிக்கெட் வழங்கப்படுவதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. மேலும் சிறப்பு தரிசன டிக்கெட் இன்று காலை 9 மணி அளவில் இருந்து கொடுக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.

சிறப்பு தரிசன டிக்கெட்:

ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையானை தரிசனம் செய்ய தமிழகம், கர்நாடகா, ஆந்திரா கேரளா மட்டுமல்லாது வெளிநாடுகளில் இருந்தும் அதிக அளவில் பக்தர்கள் வருகின்றனர். நாள்தோறும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஏழுமலையானை தரிசிக்க நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் மேற்கொள்கின்றனர். அவ்வாறு வரும் பக்தர்களுக்கு தேவஸ்தானத்தின் சார்பில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் கொரோனா மற்றும் ஓமைக்ரான் தொற்று காரணமாக பக்தர்களின் பாதுகாப்பு நலனை கருத்தில் கொண்டு தேவஸ்தானம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதன்படி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் அலிபிரி சோதனைச் சாவடியை கடக்கும் முன் 48 மணி நேரத்திற்கு முன்பு எடுத்த கொரோனா பரிசோதனையான RT-PCR நெகட்டிவ் சான்றிதழை அதிகாரிகளிடம் காண்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பிப்ரவரி மாதம் திருப்பதி செல்லும் பக்தர்களுக்காக சிறப்பு தரிசன டிக்கெட் எப்போது வழங்கப்படும் என்று எதிர்பார்த்த நிலையில் இன்று ஜனவரி 28 ஆம் தேதி டிக்கெட்டுகள் வெளியிடப்படும் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இந்த சிறப்பு தரிசனத்துக்கான டிக்கெட்டை இன்று காலை 9 மணிக்கு வழங்குவதாக திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இன்று முதல் முழு ஊரடங்கு ரத்து – வழிபாட்டு தலங்கள் மீண்டும் திறப்பு! முழு விபரம் இதோ!

இதை தொடர்ந்து சர்வ தரிசனம் மற்றும் பொது வரிசைக்கான டோக்கன்கள் ஜனவரி 29 ஆம் தேதி காலை 9 மணிக்கு வெளியாகிறது என்று திருமலை – திருப்பதி தேவஸ்தானம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள் ஒரு நாளைக்கு 20,000 வீதம் என்ற கணக்கில் இன்று காலை 9 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படுவதாக கூறப்பட்டுள்ளது. மேலும் இலவச தரிசனத்துக்காக 10,000 டிக்கெட்டுகள் 29ம் தேதி காலை 9 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!