டெட் 2 ஆம் தாள் தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு – கணினி வழியில் நடத்த திட்டம்!
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணி தகுதிக்கான டெட் 2ஆம் தாள் தேர்வை கணினி வழியில் டிசம்பர் மாதம் நடத்த தேர்வு வாரியம் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
டெட் 2 ஆம் தாள் தேர்வு:
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் ஆசிரியர் தகுதி தேர்வு மூலமாக பணி நியமனம் செய்யப்படுகின்றனர். அந்த வகையில் இலவச கட்டாயக்கல்வி உரிமை சட்டத்தின்படி இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணிகளுக்கு டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் ஆகும். இந்த டெட் தேர்வானது மொத்தமாக 2 தாள்களை கொண்டது. அதன் படி முதல் தாளில் தேர்ச்சி பெறுபவர்கள் இடைநிலை ஆசிரியராகவும், 2 ஆம் தாளில் தேர்ச்சி பெறுபவர்கள் பட்டதாரி ஆசிரியராகவும் பணி புரியலாம்.
Exams Daily Mobile App Download
அந்த வகையில் இந்த ஆண்டிற்கான டெட் தேர்வு குறித்த அறிவிப்பு கடந்த மார்ச் 7 ஆம் தேதி வெளியானது. அதில் முதல் தாளுக்கு 2 லட்சத்து 30,878 பேரும், 2-ம் தாளுக்கு 4 லட்சத்து 1,886 பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்த ஆண்டிற்கான முதல் தேர்வு அக்டோபர் 14 முதல் 19 ஆம் தேதி வரை கணினி மூலமாக நடத்தப்பட்டது. இந்த தேர்வை சுமார் 2 லட்சம் பேர் எழுதினார்கள். இந்நிலையில் 2 ஆம் தாள் தேர்வு எழுத 4 லட்சத்து 1,886 பேர் விண்ணப்பித்து இருக்கின்றனர்.
நாளை (நவ.5) முதல் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகளுக்கு விடுமுறை – டெல்லி முதல்வர் உத்தரவு!
Follow our Instagram for more Latest Updates
அவர்களுக்கு வருகிற டிசம்பர் மாதம் தேர்வு நடத்த தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் இந்த தேர்வுக்கான அட்டவணை விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அது மட்டுமில்லாமல் இந்த தேர்வையும் கணினி வழியில் நடத்த திட்டமிட்டுள்ள நிலையில், கல்லூரிகளில் பருவ விடுமுறையை கணக்கில் கொண்டு தேர்வு குறித்த தேதி வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.