தற்கொலையில் முடிந்த பிரபல தமிழ் சீரியல் நடிகையின் வாழ்கை – போலீஸ் அதிரடி விசாரணை!
சமீப காலமாக அதிகரித்து வரும் தற்கொலை சம்பவங்கள் தான் தினம் தலைப்பு செய்தியாக வருகிறது. அந்த வகையில் துணை நடிகை ஒருவர் தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை:
மனிதர்கள் அனைவரும் தங்கள் வாழ்க்கையில் தினம் ஒரு புது பிரச்சனையை சந்தித்த வண்ணம் தான் உள்ளனர். அதை எதிர்த்து நாம் நமது அடுத்த கட்ட வாழ்க்கையை எதிர்கொண்டு செல்வதில் தான் நமது தன்னம்பிக்கையும், தைரியமும் உள்ளது. ஆனால் அதை விட்டு விட்டு இன்று குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அதிக அளவில் அரங்கேறி வருகிறது. பரிட்சையில் தோல்வி முதல் காதல் தோல்வி, பெற்றோர், ஆசிரியர் திட்டுவது போன்ற சின்ன சின்ன காரணங்களுக்காக பலர் தற்கொலை செய்வது செய்திகளின் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது.
தமிழக பள்ளிக்கல்வித்துறையில் புதிய பதவிகள் – அரசாணை வெளியீடு!
இந்நிலையில், தீபா (எ)பவுவின் என்ற 29 வயது ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்த பெண் திரைத்துறையில் துணை நடிகையாக உள்ளார். இவர் தமிழில் வாழ்க்கை, துப்பறிவாளன், வாய்தா ஆகிய படங்களில் நடித்துள்ளார். சென்னையில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். திடீரென்று, இன்று காலை தீபா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
Exams Daily Mobile App Download
அவரது நண்பர்கள் மூலம் இந்த தகவல் காவல்துறைக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்கொலைக்கான காரணம் குறித்து, சோதனை செய்த பொழுது, வீட்டில் தீபா எழூதிவைத்த டைரி இருந்துள்ளது. அதில், “தனக்கு வாழ்கை பிடிக்கவில்லை. ஆதரவாக யாரும் இல்லை. நான் ஒருவரை உயிராய் காதலித்தேன். அவர் என் காதலை ஏற்கவில்லை. நான் தற்கொலை செய்துக்கொள்ளப்போகிறேன்” என அவர் எழுதி வைத்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்