ஜூன் 7க்கு பின்னர் முழு ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு – மாநில அரசு திட்டம்!!
கர்நாடகா மாநிலத்தில் கொரோனா பரவல் காரணமாக ஜூன் 7 வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளதை தொடர்ந்து, அதன் பின்னர் மேலும் 1 வாரத்திற்கு ஊரடங்கை நீடிக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.
ஊரடங்கு நீட்டிப்பு:
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வருகிறது. கர்நாடகா மாநிலத்தில் கொரோனா நோய்த்தொற்று தீவிரமடைந்தது. அதனால் ஜூன் 7 வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. அதன் பின்னர் தற்போது தொற்று எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. ஆனால் ஊரடங்கில் தற்போது தளர்வுகள் அறிவித்தால் மேலும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
TN Job “FB Group” Join Now
மேலும் கொரோனா மூன்றாம் அலை செப்டம்பர் மாதத்தில் தொடங்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதில் குழந்தைகள் அதிகமாக பாதிப்புக்கு உள்ளாக வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஆராய்ந்து, வல்லுனர்களின் பரிந்துரைகள் வழங்க நாராயணா இருதாலயா நிறுவனர் தேவிபிரசாத் ஷெட்டி தலைமையில், நிபுணர்கள் குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவுடன் இணைந்து முதல்வர் எடியூரப்பா நேற்று ஆலோசனை நடத்தினார்.
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு நடத்த வேண்டும் – முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகம்!!
அதில் மூன்றாம் அலையில் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க தேவையான படுக்கைகள், ஆக்சிஜன், மருந்து என அனைத்து வசதிகளும் தயார் நிலையில் வைத்து கொள்ளும்படி அரசுக்கு குழு பரிந்துரைத்தது. 24 ஆயிரத்துக்கும் அதிகமான ஆக்சிஜன், வென்டிலேட்டர் படுக்கைகள் தயார் நிலையில் வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது அமலில் உள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகள் மேலும் 1 வாரத்திற்கு நீடிக்கப்பட உள்ளதாகவும், இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.