செப்.19 முதல் UAE இல் துவங்கும் ஐபிஎல் தொடர்? வெளியான தகவல்!
இந்தியாவில் கொரோனா நோய்பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் தொடர் வருகின்ற செப்டம்பர் மாதம் 19ம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐபிஎல் தொடர்:
இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதம் ஐபிஎல் தொடரின் 14வது சீசன் தொடங்கியது. தற்போது கொரோனா நோய்பரவல் காலம் என்பதனால் கடும் கட்டுப்பாடுகளுடன் ரசிகர்கள் அனுமதியின்றி போட்டிகள் நடைபெற்று வந்தது. மேலும் அனைத்து போட்டிகளையும் சென்னை, டெல்லி, அஹமதாபாத், பெங்களூர், மும்பை மற்றும் கொல்கத்தா ஆகிய 6 நகரங்களில் 52 நாட்கள் நடத்த பிசிசிஐ திட்டமிட்டது. மேலும் இந்த முறை எந்த அணிக்கும் ஹோம் மேட்ச் கிடையாது என்றும் தெரிவிக்கப்பட்டது.
TN Job “FB Group” Join Now
60 போட்டிகளை கொண்ட இந்த தொடர் 29 போட்டிகள் நடைபெற்ற நிலையில் பாதியிலே நிறுத்தப்பட்டது. காரணம் ஐபிஎல் தொடரில் பங்கேற்ற வீரர்கள், பயிற்சியாளர்கள் என பலருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் வீரர்களின் நலன் கருதி பிசிசிஐ ஐபிஎல் தொடரை ஒத்திவைத்து. இந்த முடிவு ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில் மீதமுள்ள 31 போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பிசிசிஐ முடிவு செய்தது.
சூர்யா, ஜோதிகாவிற்கே டஃப் கொடுக்கும் விஜய் டிவி பிரபலம் – யாருனு நீங்களே பாருங்களே!!
அதன்படி வருகின்ற செப்டம்பர் மாதம் 19ம் தேதி முதல் போட்டிகள் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக தற்போது பிசிசிஐ அனைத்து வெளிநாட்டு வீரர்களை வரவைக்கும் பொருட்டு அந்த நாட்டின் கிரிக்கெட் வாரியத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. மேலும் 14வது ஐபிஎல் தொடரின் இறுதி போட்டி அக்டோபர் 15ல் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரபூர்வமான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இந்த தகவலினால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.