நடிகை ஆலியா மானஸாவுக்காக கணவர் சஞ்சீவ் செய்த காரியம் – அவரே பகிர்ந்து கொண்ட தகவல்! ரசிகர்கள் நெகிழ்ச்சி!

0
நடிகை ஆலியா மானஸாவுக்காக கணவர் சஞ்சீவ் செய்த காரியம் - அவரே பகிர்ந்து கொண்ட தகவல்! ரசிகர்கள் நெகிழ்ச்சி!
நடிகை ஆலியா மானஸாவுக்காக கணவர் சஞ்சீவ் செய்த காரியம் - அவரே பகிர்ந்து கொண்ட தகவல்! ரசிகர்கள் நெகிழ்ச்சி!
நடிகை ஆலியா மானஸாவுக்காக கணவர் சஞ்சீவ் செய்த காரியம் – அவரே பகிர்ந்து கொண்ட தகவல்! ரசிகர்கள் நெகிழ்ச்சி!

பிரபல சின்னத்திரை சீரியல் நடிகை ஆலியா மானஸா, தனது 2வது குழந்தையின் பிரசவத்தின் போது கணவர் சஞ்சீவ் அவரை கவனித்து கொண்ட விதம் குறித்த சில நெகிழ்ச்சியான தகவல்களை சமூக வலைதளங்கள் மூலம் ரசிகர்ளுடன் பகிர்ந்துள்ளார்.

ஆலியா மானஸா

தமிழ் சின்னத்திரையில் ஒரு சில சீரியல்களில் நடித்து மக்கள் மத்தியில் தனக்கென தனி இடத்தை உருவாக்கி வைத்திருப்பவர் பிரபல நடிகை ஆலியா மானஸா. விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘ராஜா ராணி’ என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான நடிகை ஆலியா மானஸா குறுகிய காலத்திலேயே மக்கள் விரும்பும் நாயகியாக மாறினார். எப்போதும் துறுதுறுப்பாகவும், ஆக்டிவாகவும் காணப்படும் நடிகை ஆலியா மானஸாவுக்கு ஒரு கூட்ட ரசிகர்கள் இருந்தாலும், கேமராவுக்கு முன்னால் வெளிப்படும் அவரது நடிப்பை கொண்டாடுவதற்கும் எக்கச்சக்கமான ரசிகர்கள் உள்ளனர்.

TN Job “FB  Group” Join Now

இதற்கு எளிய சான்றாக, சமூக வலைதளங்களில் இவரை மில்லியன் கணக்கில் பின் தொடரும் எண்ணிக்கையை கூறலாம். இப்படி புகழின் உச்சத்தில் இருந்த கால கட்டத்தில் நடிகை ஆலியா மானஸா, தன்னுடன் சேர்ந்து நடித்த சக நடிகர் சஞ்சீவை சில வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இப்போது இந்த தம்பதிகளுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இதில் சமீபத்தில் 2வது குழந்தையின் பிரசவத்திற்காக நடிகை ஆலியா மானஸா தனது ஆக்டிங் கரியரை கூட விட்டு கொடுத்துள்ளார். எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை ஆலியா மானஸா சமீபத்தில் தனது இன்ஸ்டா ரசிகர்களுடன் ஒரு உரையாடலை நிகழ்த்தியுள்ளார்.

கண்ணனிற்கு உதவி செய்த ஜீவா, முல்லையின் பிடிவாதத்தை நினைத்து வருத்தப்படும் கதிர் – இன்றைய எபிசோட்!

அதில் ரசிகர்கள் கேட்ட பல கேள்விகளுக்கு உற்சாகமாக பதிலளித்துள்ள ஆலியா, 2வது குழந்தையின் பிரசவம் குறித்த சில தகவலை வெளியிட்டுள்ளார். அதாவது, அர்ஷ் பிறப்பதற்கு முன்பாகவும், அதற்கு பிறகு கூட கணவர் சஞ்சீவ் மற்றும் அவரது குடும்பத்தினர் ஆலியாவை நன்றாக கவனித்து கொண்டதாக கூறி இருக்கிறார். பொதுவாக, பிரசவத்திற்கு பின்பு ஒவ்வொரு பெண்களுக்கும் ஏற்படும் அழுத்தம் அதாவது போஸ்ட்பார்ட்டம் டிப்ரஷன் தனக்கு வரவில்லை என்றும் அந்த அளவுக்கு கணவர் தன்னை கவனித்து கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், பேபி அர்ஷ் புகைப்படத்தை விரைவில் வெளியிடுவதாகவும் கூறியுள்ளார் நடிகை ஆலியா மானஸா.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!