தமிழகத்தில் தொடரும் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் – தென் மாவட்டங்களில் 20 ஆயிரம் போலீசார் குவிப்பு!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தென் மாவட்டங்களில் குண்டு வெடிப்பு குறித்து 20 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக மதுரை மாவட்ட ஐ.ஜி.அஸ்ரா கார்க் பேட்டி அளித்துள்ளார்.
பெட்ரோல் குண்டு வீச்சு:
தமிழகத்தில் கடந்த வியாழன் கிழமை கோவை சித்தாபுதூர் பகுதியில் மாநகர பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டது.அதன் பின் தொடர்ச்சியாக 3 நாட்களில் 15 இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் அரங்கேறி இருக்கிறது. இந்நிலையில் இது குறித்து ஐ.ஜி. அஸ்ரா கார்க் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் தென் மாவட்டங்களில் குண்டு வீச்சு குறித்து விளக்கம் அளித்து இருக்கிறார்.
யம்மாடி.. எட்டு வருடங்கள் கழித்து முடிவுக்கு வந்த பிரபல சன் டிவி சீரியல் – ரசிகர்கள் பிரியா விடை!
தமிழகத்தில் பெட்ரோல் குண்டு வீசுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்த அவர், அதனை மீறி குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். தென் மாவட்டத்தில் திண்டுக்கல், ராமநாதபுரம் 2 இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடைபெற்று இருக்கிறது. அதில் ஒருவர் கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Exams Daily Mobile App Download
மேலும் மாநிலம் முழுவதும் பெட்ரோல் பங்குகளில் பாட்டில்களில் பெட்ரோல் வினியோகம் செய்யக் கூடாது என பெட்ரோல் பங்க் உரிமையாளர்களுக்கு அறிவுத்தப்பட்டு உள்ளது. மேலும் தென் மாவட்டங்களில் உள்ள முக்கிய பிரமுகர்களின் வீடு, அலுவலகங்கள், தொழில் செய்யும் இடங்களில் பாதுகாப்பு கடுமையாக்கப்பட்டுள்ளது.மேலும் இரவு ரோந்து பணி டி.ஐ.ஜி. தலைமையில் நடைபெற்று வருகிறது. இனிமேல் அசம்பாவிதம் நடக்காமல் இருக்க முன்னெச்சரிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்