தீபாவளிக்கு ஊருக்கு கிளம்புறீங்களா? அப்போ இத தெரிஞ்சுக்கோங்க முதல்ல – ரயில்வே வாரியத்தின் முக்கிய அறிவிப்பு!
தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர்களுக்கு அதிக அளவில் மக்கள் செல்லவிருப்பதால்,கூட நெரிசலை தவிர்க்கும் வகையிலும், மக்களின் நலனிற்காகவும் தெற்கு ரயில்வே முக்கிய ஏற்பாடு ஒன்றை செய்துள்ளது.
சிறப்பு ரயில்கள்:
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கலை கட்டத் தொடங்கியுள்ளது. தீபாவளி பண்டிகையை ஒட்டி அனைத்து மாநில அரசுகளும் பொது இடங்களில் மக்கள் கூட்டத்தை சமாளிப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தீபாவளி பண்டிகைக்கு நகர்புறத்தில் இருந்து சொந்த ஊர்களுக்கு குடும்பத்துடன் மக்கள் அதிக அளவில் சென்று வருவது வழக்கம். இதனால் பேருந்து மற்றும் ரயில் போன்ற அனைத்து வகை போக்குவரத்துகளிலும் அதிக கூட்ட நெரிசல் இருக்கும்.
Follow our Instagram for more Latest Updates
இதனால் பண்டிகை காலத்தில் மக்களின் வசதிக்காக கூடுதல் எண்ணிக்கையிலான பேருந்து மற்றும் ரயில்களை இயக்குவது வழக்கம். இந்நிலையில், சென்னையில் இருந்து திருச்சி, திருநெல்வேலி மற்றும் ராமேஸ்வரம் போன்ற மாவட்டங்களுக்கு பயணிக்க உள்ள மக்களுக்காக மூன்று சிறப்பு ரயில்களை இயக்க உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல் – முதல்வர் வெளியிட்ட ஹேப்பி நியூஸ்!!
அதன்படி, சென்னை சென்ட்ரலில் அக்டோபர் 23ம் தேதி இரவு 8:45 மணிக்கு சிறப்பு ரயில் கிளம்பி திங்கள்கிழமை காலை 11 மணிக்கு ராமேஸ்வரம் சென்றடைகிறது. இந்த ரயில் மறுமார்கத்தில் திங்களன்று மாலை 4:20-க்கு அங்கிருந்து கிளம்பி 25ம் தேதி காலை 6:20 மணிக்கு சென்னையை அடைகிறது. திருச்சியில் இருந்து நாளை 2.15 மணிக்கு சிறப்பு ரயில் கிளம்பி இரவு 7 மணிக்கு தாம்பரம் வந்தடைகிறது. மேலும், சென்னை தாம்பரத்தில் இருந்து வரும் 27ம் தேதி இரவு 9:40 க்கு சிறப்பு ரயில் புறப்பட்டு அதிகாலை 3 மணிக்கு திருச்சிக்கு வந்தடையும்.
Exams Daily Mobile App Download
தாம்பரத்தில் இருந்து நாளை இரவு 10.20 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் திருநெல்வேலிக்கு ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு வந்து சேரும். மேலும், 26ம் தேதி மாலை 5 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து கிளம்பி 27ம் தேதி அதிகாலை 4 மணியளவில் தாம்பரம் ரயில் நிலையத்தை வந்தடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.