மியான்மரில் சிக்கியுள்ள தமிழர்களுக்காக அரசு எடுத்துள்ள முயற்சி – பொதுமக்கள் வரவேற்பு!

0
மியான்மரில் சிக்கியுள்ள தமிழர்களுக்காக அரசு எடுத்துள்ள முயற்சி - பொதுமக்கள் வரவேற்பு!
மியான்மரில் சிக்கியுள்ள தமிழர்களுக்காக அரசு எடுத்துள்ள முயற்சி - பொதுமக்கள் வரவேற்பு!
மியான்மரில் சிக்கியுள்ள தமிழர்களுக்காக அரசு எடுத்துள்ள முயற்சி – பொதுமக்கள் வரவேற்பு!

மியான்மரில் ஆன்லைன் மூலம் சட்டவிரோத வேலைகளை மேற்கொள்ள வேண்டும் என இந்திய மாணவர்களை கட்டாயப்படுத்தி வருவது தெரிய வந்தது. இதையடுத்து தற்போது இங்குள்ள தமிழக மாணவர்கள் தமிழகத்திற்கு அழைத்து வருவது தொடர்பாக அரசு முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

தமிழக மாணவர்கள்

மியான்மர் நாட்டில் தமிழக மற்றும் இந்தியர்களை ஆன்லைன் மூலம் சட்டவிரோத வேலைகளை செய்ய வேண்டும் என கட்டாயப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் இவர்கள் தனியார் நிறுவனங்களால் நடத்தப்படும் வேலைவாய்ப்பு முகாம்கள் மூலமாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் தேர்வு செய்யப்படும் நபர்கள் தாய்லாந்து நாட்டிற்கு அழைத்து செல்லப்படுவார்கள். அதன் பின்பு இவர்கள் மியான்மர் நாட்டிற்கு அழைத்து செல்லப்படுவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து சட்டவிரோத வேலைகளை செய்யாதவர்கள் கடுமையாக தாக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

தமிழகத்தில் தொடரும் பதற்றம் – குவிக்கப்பட்டுள்ள போலீஸ் படையினர்!

மேலும் இதில் 17 தமிழர்கள் தமிழக அரசுடன் தொடர்பில் உள்ளனர். அதனால் தங்களை மீட்குமாறு அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் இது தொடர்பாக தமிழக முதல்வர் கடந்த சில நாட்களுக்கு முன்பாக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளர். இந்த கடிதத்தில் மியான்மரில் சிக்கியுள்ள 50 தமிழர்கள் உட்பட 300 இந்தியர்களை பாதுகாப்பாக தாயகத்திற்கு மீட்க வேண்டும் என தெரிவித்துள்ளார். அத்துடன் இது தொடர்பாக மியான்மரில் உள்ள இந்தியத் தூதரகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

Exams Daily Mobile App Download

அதன்படி தற்போது மியான்மரில் சிக்கியுள்ள தமிழர்கள் உட்பட இந்தியர்கள் அனைவரும் தாயகத்திற்கு வர உள்ளார்கள். இதில் அனைவரும் பாதுகாப்பான முறையில் தாயகம் வந்து சேருவதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் தமிழர்கள் மியான்மரில் இருந்து தாய்லாந்து அழைத்து வரப்பட்டு அதன்பின்பு தமிழகம் திரும்புவார்கள். அப்போது தமிழகம் திரும்புவதற்கான விமான பயணச் செலவை அரசு ஏற்றுக் கொள்வதாக தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. அத்துடன் இது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு தகவல் அனுப்பியுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!