மாநில அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல் – ஹாப்பி நியூஸ் சொன்ன அரசு!

0
மாநில அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல் - ஹாப்பி நியூஸ் சொன்ன அரசு!
மாநில அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல் - ஹாப்பி நியூஸ் சொன்ன அரசு!
மாநில அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல் – ஹாப்பி நியூஸ் சொன்ன அரசு!

ராஜஸ்தான் 2022-23 ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை முதல்வர் அசோக் கெலாட் நேற்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் அரசு ஊழியர்களுக்கு அடுத்த ஆண்டு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

மாநில அரசு அறிவிப்பு:

நிகழ்வாண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களும் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன. இந்தியாவில் பிப்ரவரி 1ம் தேதி 2022-23 ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இரண்டாவது முறையாக காகிதமில்லா முறையில் தாக்கல் செய்யப்பட்ட இந்த பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகள் இடம் பெற்றிருந்தன. அந்த நிதி நிலை அறிக்கையில் தேசிய ஓய்வூதிய திட்டத்திற்கு மத்திய அரசு ஊழியர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படும் அளவு 10% என்பதிலிருந்து 14% என்று உயர்ந்திருப்பதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு கூடுதலாக 3% அகவிலைப்படி உயர்வு – 7வது ஊதியக்குழு தகவல்!

மேலும் மாநில அரசு ஊழியர்களுக்கு, திருத்தப்பட்ட வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஓராண்டு அவகாசம் இருந்த நிலையில், அது இரண்டு ஆண்டாக நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் மாநில அரசு ஊழியர்களுக்கு PF வரிச்சலுகை வழங்கப்படும் என குறிப்பிட்டிருந்தார். இதனை தொடர்ந்து ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில சட்டப்பேரவையில் 2022-23 ம் நிதியாண்டுக்கான காகிதமில்லா பட்ஜெட்டை முதல்வரும், நிதி அமைச்சருமான அசோக் கெலாட் நேற்று தாக்கல் செய்தார்.

உக்ரைனில் அவசர நிலை பிரகடனம் அமல் – ரஷ்யாவின் போர் அபாயம்! பதட்டத்தில் உலக நாடுகள்!

இந்த பட்ஜெட்டில், 2004 ஜனவரி 1 அன்று அல்லது அதற்கு பிறகு நியமிக்கப்பட்ட அனைத்து ராஜஸ்தான் அரசு ஊழியர்களுக்கு அடுத்த ஆண்டு முதல் ஓய்வூதிய திட்டத்துக்கு உரிமை உண்டு உள்பட பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. அசோக் கெலாட் தாக்கல் செய்த பட்ஜெட்டை பா.ஜ.க. கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது. அந்த வகையில் முதல்வர் அசோக் கெலாட் தாக்கல் செய்த பட்ஜெட்டில் அரசு அளித்த அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படாமல் போகலாம் என நான் உறுதி அளிக்கிறேன் என பா.ஜ.க. எம்.எல்.ஏ. குலாப் சந்த் கட்டாரியா விமர்சனம் செய்துள்ளார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!