வேலைவாய்ப்பு திட்டங்களில் சிறப்பு சலுகை அறிவிப்பு – அரசு அதிரடி!
தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் வேலைவாய்ப்பு திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு சலுகை அளிக்க உள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. மேலும் இந்த அறிவிப்புக்கு மாற்றுத்திறனாளிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
தமிழ்நாடு அரசு:
தமிழகத்தில், தற்போதைய அரசு மக்களுக்கு பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதாவது, கொரோனா காலத்தில் இந்தியா கடும் பொருளாதார நெருக்கடியை சந்திக்க நேரிட்டது. இதன் காரணமாக வேலையின்மை அதிகரிப்பு, வறுமை, விலைவாசி உயர்வு போன்றவைகள் அதிகரிக்கத் தொடங்கியது. இந்த நிலையில் மக்கள் வேலையின்றி மிகவும் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் தமிழக அரசு மக்களுக்கு பல நிவாரண உதவிகளை வழங்கி உதவி கரம் நீட்டியது. பிறகு அரசின் தீவிர முயற்சியால் கொரோனா தொற்று குறையத் தொடங்கியது. மேலும் மக்கள் அனைவரும் தங்களது இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப ஆரம்பித்தனர். நாட்டில் பொருளாதாரத்தை மீட்கும் நடவடிக்கையில் மத்திய, மாநில அரசுகள் தீவிர முயற்சியில் இறங்கினர்.
அதாவது, நாடு முழுவதும் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையில் புதிய தொழிற்சாலைகள், தனியார் தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்குதல் ஆகியவற்றின் மூலம் நாட்டில் வேலைவாய்ப்பை அதிகரிக்க வழிவகை செய்தது. மேலும் மாதந்தோறும் மாவட்ட வாரியாக தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வேலைவாய்ப்பு அதிகரிக்கப்படுகிறது. அந்த வகையில் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் வேலைவாய்ப்பு திட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் பயன்பெறும் வகையில், கல்வி, வயதுக்கான விதிகளை தளர்வு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசின் விதியின் கீழ் 2011 ம் ஆண்டு முதல் வேலை வாய்ப்புகள் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும் இந்த திட்டத்தின் கீழ் பயன் பெற வயது வரம்பு 18-35 வரையும், மாற்றுத்திறனாளிகள், பட்டியலினத்தவர், பெண்கள், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், முன்னாள் ராணுவத்தினருக்கு அதிகபட்சமாக, 45 வரையும் வயது இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து எட்டாம் வகுப்பு வரை கல்வித் தகுதியும், ஆண்டு வருமானம் 5 லட்சத்துக்கு மிகாமலும் இருக்க வேண்டும். இந்த நிலையில் வேலைவாய்ப்பு திட்ட விதிகளில் இருந்து, மாற்றுத்திறனாளிகளுக்கு தளர்வு குறித்து மாற்றுத்திறனாளிகள் சங்க பிரதிநிதிகள் ஆலோசனை கூட்டத்தில் கோரிக்கை வைக்கப்பட்டதை அடுத்து மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகபட்சமாக, 55 வயது வரை வயது வரம்பை உயர்த்தியும், எட்டாம் வகுப்பு வரை கல்வித் தகுதி இருக்க வேண்டும் என்ற விதியை நீக்கியும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்