தலைநகரில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? வேகமெடுக்கும் கொரோனாவை தடுக்க அரசு முடிவு?

0
தலைநகரில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? வேகமெடுக்கும் கொரோனாவை தடுக்க அரசு முடிவு?
தலைநகரில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? வேகமெடுக்கும் கொரோனாவை தடுக்க அரசு முடிவு?
தலைநகரில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? வேகமெடுக்கும் கொரோனாவை தடுக்க அரசு முடிவு?

நாட்டின் தலைநகரான டெல்லியில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் காரணத்தினால் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுமோ என மக்கள் பீதியில் உள்ளனர். இதற்கு தற்போது டெல்லியின் துணை முதல்வர் விளக்கம் அளித்துள்ளார்.

முழு ஊரடங்கு அமல்

உலகம் முழுவதுமே கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று அதிகமாக இருந்தது. தற்போது தான் ஓரளவுக்கு தொற்று குறைந்து மக்கள் தங்களது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். பல மாநிலங்களிலும் மாஸ்க் அணிவது கட்டாயம் அல்ல, விரும்பினால் மாஸ்க் அணிந்து கொள்ளலாம் மற்றும் பொது இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்றிக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் சீனா உள்ளிட்ட நாடுகளில் மீண்டும் கொரோனா பரவல் அதிகமாக பரவி கொண்டிருக்கிறது

TN Job “FB  Group” Join Now

தற்போது XE என்னும் புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் பரவி கொண்டிருப்பதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். XE என்னும் கொரோனா வைரஸ் குஜராத்திலுள்ள ஒருவருக்கும் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் நாட்டின் தலைநகரான டெல்லியிலும் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் டெல்லியில் கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டு ஊரடங்குக்கு தளர்வு அளிக்கப்பட்டது. ஊரடங்கு தளர்த்தப்பட்டதுமே மீண்டும் டெல்லியில் கொரோனா வைரஸ் அதிகமாக பரவிக்கொண்டிருக்கிறது.

தமிழகத்தின் 17 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் – சென்னை வானிலை மையம் அறிக்கை!

கடந்த 24 மணி நேரத்தில் மட்டுமே 461 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைப்பு அறிவித்துள்ளது. மேலும் டெல்லியில் உள்ள 8646 பேருக்கு கொரோனா பரிசோதனையும் செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுமோ என மக்கள் பீதி அடைந்த நிலையில் டெல்லி துணை முதலமைச்சரான மணிஷ் சிசோடியா இதற்கு விளக்கம் அளித்துள்ளார். கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் மக்கள் யாரும் பீதியடைய தேவையில்லை. மருத்துவமனையில் குறைந்த அளவிலான மக்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனர் என கூறியுள்ளார். மேலும் மக்கள் கண்டிப்பாக மாஸ்க் அணியும் படியும், சமூக இடைவெளியை பின்பற்றும்படி வலியுறுத்தப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!