டிச.6 முதல் ஜன.1 வரை மீண்டும் முழு ஊரடங்கு? மாநில அரசு திடீர் உத்தரவு!!

0
டிச.6 முதல் ஜன.1 வரை மீண்டும் முழு ஊரடங்கு? மாநில அரசு திடீர் உத்தரவு!!
டிச.6 முதல் ஜன.1 வரை மீண்டும் முழு ஊரடங்கு? மாநில அரசு திடீர் உத்தரவு!!
டிச.6 முதல் ஜன.1 வரை மீண்டும் முழு ஊரடங்கு? மாநில அரசு திடீர் உத்தரவு!!

ஜார்கண்ட் மாநிலத்தில் ஒமிக்ரான் அச்சத்தின் காரணமாக வருகிற டிச.6 ஆம் தேதி முதல் ஜன.1-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பது வதந்தி என்றும் மர்ம நபர்கள் முதல்வர் ட்வீட் போல் எடிட் செய்து உள்ளனர். யாரும் இந்த செய்தியை நம்ப வேண்டாம் என்று மாநில அரசு விளக்கம் தெரிவித்துள்ளது.

முழு ஊரடங்கு 

இந்தியாவில் கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து கொரோனா தடுப்பூசியும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த தடுப்பூசியினை அனைவரும் செலுத்தி கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்பட்டது. இதனால் தற்போது கொரோனா நோய் தொற்று பரவல் கட்டுக்குள் வரவழைக்கப்பட்டது. தற்போது தென்னாப்பிரிக்காவில் உருமாற்றம் அடைந்த புதிய வகை கொரோனா வைரஸான ‘ஒமிக்ரான்’ கண்டறியப்பட்டுள்ளது. இது 10 மடங்கு வேகமாக பரவக்கூடிய வைரஸாக உள்ளது. தற்போது வரை இந்த வைரஸ் 29 நாடுகளில் பரவியுள்ளது. இதனால் உலக நாடுகள் அனைத்தும் ஒமிக்ரான் பரவல் காரணமாக பல்வேறு விதிமுறைகளை அறிவித்து வருகின்றன.

விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ அஞ்சலி ஸ்வீட்டியின் லேட்டஸ்ட் வீடியோ – இன்ஸ்டா வைரல்!

இந்தியாவில் விமான நிலையங்களில் வரும் பயணிகளை மருத்துவ பரிசோதனை மேற்கொண்ட பிறகு பரிசோதனையின் முடிவில் கொரோனா நெகட்டிவ் என்று வந்தால் மட்டுமே பயணிகள் வெளியேற்றப்படுவார்கள். அத்துடன் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் மட்டுமே விமான நிலையத்திற்குள் அனுமதிக்கபடுவார்கள். அவ்வாறு செலுத்தவில்லை என்றால் கொரோனா நெகட்டிவ் என்ற சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகளை அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் ஜார்கண்ட் மாநிலத்தில் ஒமிக்ரான் பரவல் காரணமாக வருகிற டிச.6 ஆம் தேதி முதல் ஜன.1-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ் – சம்பள உயர்வு வழங்க நடவடிக்கை!!

இவ்வாறு பரவி வரும் செய்தி அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் ட்விட்டர் பதிவு போல் சமூக வலைதளங்களில் பரவி பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனை பற்றி அம்மாநில அரசு கூறியதாவது, மாநிலத்தில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று பரவி வரும் அனைத்துவிதமான செய்திகளும் வதந்தி என்று தெரிவித்துள்ளன. மேலும் இந்த ஊரடங்கு செய்திகள் மர்ம நபர்கள் முதல்வர் ட்வீட் போல் எடிட் செய்து பரப்பி வருகின்றன. பொதுமக்கள் யாரும் இந்த செய்தியை நம்ப வேண்டாம் என்றும் அந்த மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர் என்றும் தெரிவித்துள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!