தமிழகத்தில் நெருங்கும் பண்டிகை காலம்.. ஆம்னி பஸ்களுக்கு எச்சரிக்கை! கூடுதல் கட்டணத்திற்கு தடை!

0
தமிழகத்தில் நெருங்கும் பண்டிகை காலம்.. ஆம்னி பஸ்களுக்கு எச்சரிக்கை! கூடுதல் கட்டணத்திற்கு தடை!
தமிழகத்தில் நெருங்கும் பண்டிகை காலம்.. ஆம்னி பஸ்களுக்கு எச்சரிக்கை! கூடுதல் கட்டணத்திற்கு தடை!
தமிழகத்தில் நெருங்கும் பண்டிகை காலம்.. ஆம்னி பஸ்களுக்கு எச்சரிக்கை! கூடுதல் கட்டணத்திற்கு தடை!

தனியார் ஆம்னி பேருந்துகளில் அதிக விலையில் கட்டணம் வசூலிக்கப்படுவதற்கு தடை விதித்து தமிழக போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார்.

ஆம்னி பேருந்துகள்:

தமிழகத்தில் பண்டிகை காலம் நெருங்கி வருகிறது. பொதுவாக அரசு பேருந்துகளில் பண்டிகை காலத்தில் விரைவில் டிக்கெட்டுகள் தீர்ந்து விடுவதால், தனியார் பேருந்துகள் இதனை பயன்படுத்தி அதிக விலையில் டிக்கெட்டுகளை விற்பனை செய்யப்படும். இது தொடர்பாக, அடிக்கடி அரசுக்கு புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. இதற்கான வரைமுறைகளை அரசு அவ்வப்போது அறிவித்து வரும்.

இந்நிலையில், தமிழகத்தில் வரும் செப்டம்பர் 30ம் தேதி அனைத்து மாணவர்களுக்கும் பள்ளியில் காலாண்டு தேர்வுகள் முடிந்து விடும். இதன்பின்னர், ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை போன்ற பண்டிகைகள் வர உள்ளது. இதனால், அக்டோபர் 1ம் தேதி முதல் தமிழகத்தில் தொடர் விடுமுறைகள் வர உள்ளது. இதற்காக அரசு முன்னதாக கூடுதல் பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளது.

தமிழகத்தில் அமலுக்கு வரும் “புதிய பாரத எழுத்தறிவு திட்டம்” – அரசு தொடக்கம்!

Exams Daily Mobile App Download

இருப்பினும், அதிக அளவில் மக்கள் பயணங்களை மேற்கொள்ள இருப்பதால், தனியார் ஆம்னி பேருந்துகளை நாடி செல்லும் நிலை ஏற்படும். இதனை பயன்படுத்தி ஆம்னி பேருந்துகள் கூடுதல் கட்டணங்களை வசூலிக்க கூடாது என்று தமிழக போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார். மேலும், தனியார் பேருந்து கட்டண நிர்ணயம் தொடர்பாக ஆலோசனை நடத்தி இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!