தான் அப்பாவான செய்தியை குஷியாக அறிவித்த பிரபல சீரியல் நடிகர் – குவியும் வாழ்த்துக்கள்!
ஜீ தமிழில் ஹிட் சீரியல்களின் வரிசையில் இருக்கும் ” செம்பருத்தி” சீரியலில் நடித்து பிரபலமானவர் நடிகர் கதிர். அவருக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்துள்ள செய்தியை, சமூக வலைத்தளம் மூலமாக தனது ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார்.
நடிகர் கதிர்:
தமிழ் சின்னத்திரையில் நடன நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு, தன்னுடைய திறமையால் ஏகப்பட்ட ரசிகர்கள் மனதை கவர்ந்தவர் நடிகர் கதிர். அவர் திறமைக்கு கிடைத்த வாய்ப்பாக, டாப் சீரியலில் ஒன்றான செம்பருத்தி சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதில் கதாநாயகனின் தம்பியாக அருண் கதாபாத்திரத்தில் 1000 எபிசோடுகளை கடந்து நடித்து இருந்தார். நடிப்பு மீது இருந்த ஆசையால் சின்னத்திரையில் நடன நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுத்த அவருக்கு செம்பருத்தி சீரியல் நல்ல வாய்ப்பாக இருந்தது.
இந்நிலையில் கதிர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் தன்னுடைய நீண்ட நாள் காதலியான சிந்து என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தன்னுடைய திருமண புகைப்படங்களை வெளியிட்ட அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். மேலும் பல பெண் ரசிகர்கள் அவருடைய திருமணத்திற்கு சோகமான கமெண்ட்களை பதிவிட்டனர். தற்போது செம்பருத்தி சீரியல் முடிவடைந்த நிலையில் இவருடைய ரசிகர்கள் வருத்தத்தில் இருக்கின்றனர்.
சமையல் வேலைகளை செய்யும் பாக்கியா, மண்டபத்திற்கு வந்த கோபி ராதிகா – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட் !
Exams Daily Mobile App Download
தற்போது கதிர் தனது ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் ஹாப்பியான செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தனக்கு பெண் குழந்தை பிறந்திருப்பதாக தெரிவித்துள்ளார். நேற்று மகள்கள் தினம் என்பதால், தனது சந்தோசத்தை பதிவாக வெளியிட்டு இருக்கிறார். அதில் மகள்கள் தினத்தை கொண்டாடும் ஒவ்வொரு தந்தைக்கும் மகிழ்ச்சி. .!! நானும் என் மகளுடன்! ஆம்….. எங்களுக்கு அழகான இளவரசி வந்து விட்டாள் என பதிவிட்டுள்ளார். அவருடைய இந்த பதிவிற்கு ரசிகர்கள் பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்