மீண்டும் சின்னத்திரையில் ரீஎன்ட்ரி கொடுத்த பிரபல நடிகை – ப்ரோமோ ரிலீஸ்! ரசிகர்கள் உற்சாகம்!
ஜீ தமிழ் “கோகுலத்தில் சீதை” சீரியலில் வசுந்தரா கதாபாத்திரம் மூலமாக அறிமுகமானவர் நடிகை ஆஷா கவுடா. இந்நிலையில் அந்த சீரியலின் முடிவுக்கு பின் மீண்டும் அவர் சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்து இருக்கிறார். அது குறித்த ப்ரோமோ வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.
நடிகை ஆஷா கவுடா
தமிழ் சின்னத்திரையில் பிரபலமான சேனல்களில் ஒன்று தான் ஜீ தமிழ். இந்த சேனலில் ஒளிபரப்பான “கோகுலத்தில் சீதை” சீரியல் ஏகப்பட்ட ரசிகர்களை கொண்ட முன்னணி சீரியல்களில் ஒன்றாக இருந்தது. இந்த சீரியலில் டான்ஸ் மாஸ்டர் நந்தா கதாநாயகனாகவும், அவருக்கு ஜோடியாக வசுந்தரா கதாபாத்திரத்தில் ஆஷா கவுடாவும் நடித்து வந்தார். இந்நிலையில் அந்த சீரியல் சில மாதங்களுக்கு முன் முடிவடைந்த நிலையில், ஆஷா கவுடா மீண்டும் சின்னத்திரையில் என்ட்ரி கொடுக்காமல் இருந்தார்.
Follow our Instagram for more Latest Updates
ரசிகர்கள் பலர் “கோகுலத்தில் சீதை” சீசன் 2 தொடங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். ஆனால் அதற்கு வாய்ப்பில்லை என்பது தற்போது உறுதியாக தெரிகிறது. இந்த சீரியலின் நாயகன் நந்தா தற்போது விஜய் டிவியில் புதிய சீரியலில் நடித்து வருகிறார். ஆனால் ஆஷா கவுடா எந்த சீரியலிலும் நடிக்காமல் இருந்த நிலையில் ஜீ தமிழில் புதிய சீரியலில் அவர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது.
Exams Daily Mobile App Download
ஆனால் அது குறித்த முழு விவரம் வெளியாகாத நிலையில், தற்போது கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் பச்சைக்கிளி சீரியலில் தீபாவளி ஸ்பெஷல் நிகழ்ச்சியில் ஆஷா கவுடா நடிக்க இருக்கிறார். அது குறித்த ப்ரோமோ வெளியான நிலையில் ரசிகர்கள் அதிர்ச்சியில் இருக்கின்றனர். ஆனால் இந்த சீரியலில் அவர் வெறும் சிறப்பு ரோலில் தான் நடிப்பதால், விரைவில் நல்ல கதையுடன் இருக்கும் புது சீரியலில் அவர் என்ட்ரி கொடுக்க வேண்டும் என ரசிகர்கள் தங்கள் எதிர்பார்ப்பை முன் வைத்துள்ளனர்.