திருமணத்தை நிறுத்த மொத்தமாக கிளம்பி வந்த குடும்பத்தினர்.. கலங்கி நின்ற கோபி – விறுவிறுப்பான பாக்கியலட்சுமி!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், ராமமூர்த்தி திருமணத்தை நிறுத்துவார் என எதிர்பார்த்த நிலையில், அவரை அப்பா என பார்க்காமல் அவமானப்படுத்தி கோபி அனுப்பிவிடுகிறார். இந்நிலையில் கோபி ராதிகா திருமணத்தை நிறுத்த எழில், செழியன், இனியா, ஈஸ்வரி என குடும்பமே மண்டபத்திற்கு வர, பெரிய பிரச்சனை வர இருக்கிறது.
பாக்கியலட்சுமி
பாக்கியலட்சுமி சீரியலில் கோபி ராதிகா திருமணம் நடக்குமா என ட்விஸ்ட் உடன் காட்சிகள் நகர்ந்து கொண்டிருக்கிறது. கோபி கல்யாணத்தில் தான் சமைக்க போகிறோம் என தெரியாமல் பாக்கியா இருக்க ஆனால் உண்மை தெரிந்த பின் கூட சமையல் ஆர்டர் தான் முக்கியம் என பாக்கியா நினைக்கிறார். அதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். அதன் பின் மண்டபத்தை தேடி ராமமூர்த்தி வர, எப்படியும் திருமணத்தை நிறுத்திவிடுவார் என ரசிகர்கள் ஆவலுடன் இருந்தனர்.
ஆனால் அவரையும் உடல்நிலை சரியில்லாத அப்பா என பார்க்காமல் கோபி அவமானப்படுத்தி அனுப்பிவிடுகிறார். இதற்கு மேல் எனக்காக பேசி நீங்க அசிங்கப்பட வேண்டாம் என பாக்கியா கேட்டுக் கொள்ள, ராமமூர்த்தி கிளம்பி வீட்டிற்கு செல்கிறார். மறுபக்கம் ராமமூர்த்தி வீட்டிற்கு சென்று விவரத்தை சொல்ல, என் டாடி அப்படி எல்லாம் செய்யமாட்டார் என சொல்லி, இனியா நம்பிக்கையுடன் பேசுகிறார்.
தாமரை செல்விக்கு அடிச்ச லக்கா.. அதிரடியாக வாய்த்த சினிமா சான்ஸ் – அவரே வெளியிட்ட புகைப்படம்!
Exams Daily Mobile App Download
அடுத்ததாக திருமணத்தை நிறுத்த இனியா, செழியன், எழில், ஈஸ்வரி, ஜெனி என அனைவரும் மண்டபத்திற்கு வர, கோபிக்கு என்ன செய்வது என தெரியாமல் இருக்கிறது. இந்நிலையில் இனியாவும், ஈஸ்வரியும் கோபியிடம் கெஞ்ச அதனால் கோபி மனம் மாறுமா என்பது தான் அடுத்த ட்விஸ்ட்டாக இருக்க போகிறது. மேலும் ராதிகாவின் கணவர் ராஜேஷ் வர, திருமண மண்டபத்தில் பெரிய பாச போராட்டம் நடைபெற இருக்கிறது. இதெல்லாம் அடுத்து வரும் எபிசோடுகளில் வர இருக்கிறது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்