5,904 சதுர கிமீ பரப்பளவுக்கு விரிவடையும் சென்னை – சூப்பர் திட்டம்!
சென்னை பெருநகர எல்லையானது 1,189 சதுர கிமீ.ல் இருந்து 5,904 கிமீ. ஆக விரிவாக்கபடவுள்ளது. இது குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.
விரிவாக்கம்:
தற்போதைய கால கட்டத்தில் மக்கள் கிராமத்தில் இருந்து நகரத்தை நோக்கி நகர்ந்து வருகின்றனர். இதன் காரணமாக நகரங்களில் நெருக்கடி அதிகமாகி வருகிறது. தமிழகத்தில் வளர்ந்த மாவட்டமாக திகழ்வது சென்னை. ஆனால் சென்னை குறைவான பரப்பளவை மட்டுமே கொண்டுள்ளது. இந்நிலையில் சென்னை 4 மாநகராட்சிகள், 12 நகராட்சிகள், 14 பேரூராட்சிகள், 22 ஊராட்சி ஒன்றியங்களுடன் 1,189 சதுர கி.மீ இல் இருந்து 5,904 கிமீ க்கு விரிவாக்கப்படவுள்ளது.
விதிகளை மீறும் அரசு ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை – அரசு அதிரடி அறிவிப்பு!
Follow our Instagram for more Latest Updates
47 ஆண்டுகளுக்குப்பின் தற்போது விரிவாக்கப்படவுள்ளதால் தற்போதைய 1,189 சதுர கி.மீட்டருடன் கூடுதலாக 4,715 சதுர கிமீ பரப்பு இணைந்து, 5,904 சதுர கி.மீட்டராக விரிவாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்காக 1,225 கிராமங்கள் இதில் இணைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விரிவாக்கம் செய்யப்பட்ட பின் சென்னை பெருநகர மக்கள் தொகைஅளவு 1.59 கோடியாக மாறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இறுதியில் பெங்களூரு, ஐதராபாத் ஆகியவற்றை தொடர்ந்து சென்னை அதிக பரப்பளவு கொண்ட பகுதியாக திகழும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.