தமிழக அரசின் இ-பதிவு இணையம் இன்று மாலை வரை செயல்படாது – அமைச்சர் தகவல்!
தமிழகத்தில் இன்று மாலை வரை தொழில்நுட்ப காரணங்களால் இ- பதிவு தளம் செயல்படாது என தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
இ-பதிவு தளம்:
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த மே 10ம் தேதி முதல் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் வெளியில் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுப்போக்குவரத்து இயங்குவதற்கும் அரசு தடை விதித்துள்ளது. ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் தங்கள் அவசர பயணத்திற்காக இ- பதிவு செய்து பயணிக்கும் படி அறிவுறுத்தப்பட்டனர்.
TN Job “FB Group” Join Now
அத்தியாவசிய கடைகள் காலை 10 மணி வரை இயங்குவதற்கும் அனுமதி அளிக்கப்பட்டது. இந்த வாய்ப்பை பொதுமக்கள் முறையாக பயன்படுத்தாமல் அதிக அளவில் வெளியில் சுற்றி வந்தனர். இதனால் நோய் அதிக அளவில் பரவி ஆபத்தை ஏற்படுத்தியது. இதனால் கடந்த மே 24ம் தேதி முதல் தளர்வுகளற்ற ஊரடங்கை அரசு அறிவித்தது. தற்போது மாநிலத்தில் நோய் பாதிப்புகள் குறைந்து உள்ள காரணத்தால் இன்று முதல் சில தளர்வுகளை அரசு அளித்துள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை ரீல்ஸ் வீடியோ – நயன்தாராவுக்கே டஃப் கொடுப்பாங்க போல!
அதன்படி, காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மளிகை, காய்கறிகள், இறைச்சி கடைகள், பழக்கடைகள் போன்றவை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இ – பதிவு செய்து வாடகை கார் மற்றும் ஆட்டோக்கள் பயணிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும், எலக்ட்ரீசியன், பிளம்பர்கள், கணினி உள்ளிட்ட பொருட்கள் பழுது பார்க்கும் நபர்கள், தச்சர் உள்ளிட்ட சுயதொழில் செய்வோருக்கு இ-பதிவு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஜூன் 20 வரை தளர்வுகளுடன் முழு ஊரடங்கு நீட்டிப்பு – மாநில அரசு உத்தரவு!!
இதனால் சுயதொழில் செய்வோர் அதிக அளவில் பதிவு செய்ய இணையதளத்தை அணுகியுள்ளனர். ஒரே நாளில் பல லட்சம் பேர் இணையத்தில் பதிவு செய்ய முயன்றுள்ளதால் இணையதளம் முடங்கியுள்ளது. இதனை சரி செய்து மாலைக்குள் மீண்டும் சேவை தொடங்கப்படும் என்று தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் அறிவித்துள்ளார்.