தமிழகத்தில் நர்சரி மற்றும் மழலையர் பள்ளிகளின் அவல நிலை – திறப்பது கேள்விக்குறிதான்!
தமிழக அரசு பிப்ரவரி 16ம் தேதி முதல் மீண்டும் நர்சரி மற்றும் மழலையர் பள்ளிகளை திறக்க அனுமதி அளித்துள்ள நிலையில் அவை மீண்டும் திறக்கப்படுவது என்பது கேள்விக்குறியாக தான் உள்ளது.
நர்சரி பள்ளிகள்:
தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று பாதிப்புகள் கடந்த 2020ம் ஆண்டு முதல் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. தொடர்ந்து முதல் அலை, 2ம் அலை மற்றும் தற்போது 3ம் அலை என்று தொடர்ந்து பாதிப்புகள் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால் நோய்த்தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இந்த கொரோனா கால ஊரடங்கு காலத்தில் அனைத்து வகையான பொது நடவடிக்கைகளுக்கும் தடை செய்யப்பட்டது.
“பாரதி கண்ணம்மா” வெண்பா பரீனாவிற்கு வந்த நெகட்டிவ் கமெண்ட் – வைரலாகும் இன்ஸ்டா பதிவு!
ஆனால் நடுவில் கொரோனா தொற்று பாதிப்புகள் குறைந்து விட்ட சமயங்களில் மற்ற அனைத்து நடவடிக்கைகளும் முறையான கட்டுப்பாடுகளுடன் மீண்டும் அனுமதிக்கப்பட்டது. கல்வி நிலையங்களில் கடந்த ஆண்டு முன்னதாக 10 – 12 வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்ட நிலையில், கடந்த செப்டம்பர் மற்றும் நவம்பர் மாதங்களில் முறையே 9 முதல் 12ம் வகுப்பு மற்றும் 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டது.
தமிழகத்தில் மார்ச் 2ம் தேதி உள்ளுர் விடுமுறை – பொதுமக்கள் கோரிக்கை!
ஆனால் இதுவரை மழலையர் மற்றும் நர்சரி வகுப்புகள் திறக்க அனுமதி வழங்கவில்லை. ஆனால் கடந்த வாரம் முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தமிழகத்தில் இருந்த பல கொரோனா கால கட்டுப்பாடுகளையும் நீக்கியும், நர்சரி மற்றும் விளையாட்டு பள்ளிகளை பிப்ரவரி 16ம் தேதி முதல் திறக்க அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆனால் அரசு அனுமதி வழங்கியிருந்தாலும், நர்சரி பள்ளிகளின் முதல்வர்கள் தற்போது பள்ளிகளை திறக்க தயாராக இல்லை. பள்ளிகளின் உட்கட்டமைப்புகளை சீரமைத்தல், ஆசிரியர்கள், குழந்தை பராமரிப்பாளர்களை நியமித்தல் போன்ற பணிகள் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது.
இவர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத நிலை நீடித்ததால் அவர்களை பணிநீக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது. இவை அனைத்தும் மீண்டும் ஒரு சில நாட்களில் சரி செய்ய முடியாது என்றும், அதற்கான நிதி நிலை இல்லை என்றும், பள்ளிகள் திறப்பு குறித்த தீர்க்கமான முடிவு எடுக்க முடியாததால் மீண்டும் அதிக அளவு முதலீடு செய்ய தயாராக இல்லை என்றும் தமிழகம் முழுவதும் உள்ள பல நர்சரி பள்ளிகளின் முதல்வர்கள் அறிவித்துள்ளனர்.