அதிநவீன சோதனையால் நேர்ந்த ஆபத்து ..ஆயிரக்கணக்கான உயிர்கள் பலி – சிக்கலில் எலான் மஸ்க்!
உலகம் முழுவதும் தனது அதிரடியான செயல்பாடுகளால் மக்கள் மத்தியில் அதிகம் பேசப்படும் நபராக உள்ள எலான் மஸ்க் தற்போது தனது சோதனை காரணமாக சிக்கலில் சிக்கி உள்ளார்.
எலான் மஸ்க்:
எலான் மஸ்க் தனது நிறுவனத்தின் மூலம் ஆரம்பிக்கும் அனைத்து விஷயங்களையும் வேற லெவலில் தான் யோசிப்பார். அவரது செவ்வாய் கிரக சுற்றுலா முதல் எலெக்ட்ரிக் கார் வரை அனைத்துமே தற்போது வரை ஆச்சர்யத்தின் உச்சமாக பார்க்கப்பட்டு வருகிறது. இதேபோல், மனிதர்களின் உடலில் இருக்கும் பிரச்சனைகள் காரணமாக செயல்பட முடியாதவர்களை செயல்பட வைக்கும் வகையிலான சோதனையை நியூராலிங்க் நிறுவனம் மூலம் செய்து வருகிறார்.
மதுரையின் ‘மண்ணின் மைந்தன்’ ஓவியர் ‘பத்மஸ்ரீ’ மனோகர் தேவதாஸ் மறைவு – முதல்வர் இரங்கல்!
இந்த சோதனையில் மனிதர்களின் மூளையில் பொருத்தப்படும் சிப் மூலம் , பார்வை அற்றவர்கள் பார்க்கவும், கால்கள் செயல்படாதவர்கள் நடக்கவும், நரம்பியல் பிரச்சனைகளை தீர்க்கும் வகையிலும் செயல்படும் என்று கூறப்படுகிறது. இதற்கான சோதனை முயற்சியில் எலி, குரங்கு, பன்றிகள், ஆடுகள் போன்றவை ஈடுபடுத்தப்படுகின்றது.
Follow our Instagram for more Latest Updates
ஆனால் மஸ்க் இந்த சோதனையை விரைவாக முடிக்க வேண்டும் என்று ஊழியர்களுக்கு மன அழுத்தம் கொடுத்ததால், 2018 ம் ஆண்டு முதல் 1,500 விலங்குகள் கொள்ளப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. மேலும், விலங்குகளின் எண்ணிக்கை பயன்பாடு குறித்த எந்த வித ஆதாரங்களும் இல்லை என்பதால், இதை விட கூடுதலான விலங்குகள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று யூகிக்கப்படுகிறது. இதற்கான வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்படும் என்று தெரிகிறது.