தமிழகத்தில் நடப்பாண்டு நீட் தேர்வு நடைபெறும், அடுத்தாண்டு விலக்கு – அமைச்சர் தகவல்!

0
தமிழகத்தில் நடப்பாண்டு நீட் தேர்வு நடைபெறும், அடுத்தாண்டு விலக்கு - அமைச்சர் தகவல்!
தமிழகத்தில் நடப்பாண்டு நீட் தேர்வு நடைபெறும், அடுத்தாண்டு விலக்கு - அமைச்சர் தகவல்!
தமிழகத்தில் நடப்பாண்டு நீட் தேர்வு நடைபெறும், அடுத்தாண்டு விலக்கு – அமைச்சர் தகவல்!

தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் நீட் தேர்வு நடைபெற இன்னும் 10 நாட்களே இருப்பதால் அதிலிருந்து விலக்கு பெறுவது இயலாத காரியம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்தார். இதனால் இம்முறை நீட் தேர்வு நடைபெறும் என கூறியுள்ளார்.

நீட் தேர்வு:

திமுக தேர்தல் அறிக்கைகளில் முக்கியத்துவம் வாய்ந்தது நீட் தேர்வு ரத்து. இதனால் ஆட்சிக்கு வந்த பிறகு முதல்வர் முக ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான அரசு நீட் தேர்வில் விலக்கு பெறுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. தற்போது நடைபெற்று வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் நீட் தேர்விற்கு எதிரான மசோதா நிறைவேற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் நேற்று ஒருநாள் பயணமாக டெல்லி புறப்பட்டு சென்றார். அங்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சரை சந்தித்து 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளார்.

சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களின் பணி நியமனம் – திருமாவளவன் கோரிக்கை!

தமிழகம் திரும்பிய அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் பேசுகையில், தமிழகத்தில் கேரள எல்லையை ஒட்டியுள்ள மாவட்டங்களுக்கு கூடுதல் தடுப்பூசிகள் ஒதுக்க கோரியுள்ளதாக தெரிவித்தார். நடப்பாண்டு எய்ம்ஸ் மாணவர் சேர்க்கை, புதிய மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை உள்ளிட்ட கோரிக்கைகளையும் வலியுறுத்தி உள்ளார். அதுமட்டுமின்றி தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பது குறித்தும் கோரியுள்ளார். அதன்படி செப்.13ம் தேதிக்குள் சட்டப்பேரவையில் இது தொடர்பான மசோதா நிறைவேற்றப்படும். பின்னர் ஒன்றிய அரசு மற்றும் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற அனுப்பப்படும்.

தமிழகத்தில் இன்று மட்டும் 1,568 பேருக்கு கொரோனா உறுதி – சுகாரத்துறை அறிக்கை!

இவ்வாறாக சட்ட நடவடிக்கைகள் அனைத்தும் முன்னெடுக்கப்பட்டு நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறப்படும். மேலும் நடப்பாண்டில் நீட் தேர்வு நடைபெற இன்னும் சில நாட்களே உள்ளதால் அதனை ரத்து செய்வது இயலாத ஒன்று. தற்போது மாணவர்களும் தேர்விற்கு தயாராகி உள்ளனர். இதனால் நடப்பாண்டில் தேர்வு நடைபெறும். எனினும் அடுத்த கல்வியாண்டில் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதிபட தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!