மாற்றுத் திறனாளிகளுக்கான கழிப்பறைகள் குறித்த வழக்கு – தமிழக அரசிடம் நீதிமன்றம் கேள்வி!!

0
மாற்றுத் திறனாளிகளுக்கான கழிப்பறைகள் குறித்த வழக்கு - தமிழக அரசிடம் நீதிமன்றம் கேள்வி!!
மாற்றுத் திறனாளிகளுக்கான கழிப்பறைகள் குறித்த வழக்கு - தமிழக அரசிடம் நீதிமன்றம் கேள்வி!!
மாற்றுத் திறனாளிகளுக்கான கழிப்பறைகள் குறித்த வழக்கு – தமிழக அரசிடம் நீதிமன்றம் கேள்வி!!

தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் மாற்றுத் திறனாளிகள் எளிதாக பயன்படுத்தும் வகையில் கழிப்பறைகள் அமைக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அது குறித்து தமிழக அரசுக்கு நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

நீதிமன்றம் கேள்வி:

தமிழகத்தில் பொது இடங்களிலும், அரசு அலுவலங்களில் மாற்று திறனாளிகளுக்கான கழிப்பறைகள் வசதி சரியாக இல்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. பொதுமக்கள் பயன்படுத்தும் சாதாரண கழிப்பறைகளை மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்த, அவர்களுக்கு மற்றவர்களின் உதவி தேவைப்படுகிறது. எனவே மாற்று திறனாளிகளுக்கு கழிப்பறை அமைக்க வேண்டும் என அந்த வழக்கில் குறிப்பிடப்பட்டது.

குமரி மாவட்டத்தில் பிப்.6 ஆம் தேதி கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!

Follow our Instagram for more Latest Updates

மேலும் இந்த வழக்கு விசாரணையில் அரசு அலுவலகங்களில் மாற்று திறனாளிகளுக்கான கழிப்பறை கட்டாயம் இருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. அது மட்டுமில்லாமல் மாற்றுத் திறனாளிகளுக்கான கழிப்பறைகளை பாலின சார்பற்ற கழிப்பிடங்களாக அறிவிக்க முடியுமா? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் பாலின சார்பற்ற கழிப்பிடங்கள் அமைப்பது குறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!