நாட்டின் முதல் ஹெட்ரோலோகஸ் தடுப்பூசி – முழு விபரம் இதோ!
இந்தியாவில் கொரோனா வைரஸுக்கு எதிராக கோவாக்சின், கோவிஷீல்டு உள்ளிட்ட தடுப்பூசி மருந்துகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு ஹெட்ரோலோகஸ் தடுப்பூசி என்ற பூஸ்டர் டோஸ் தடுப்பூசிக்கு இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.
கொரோனா தடுப்பூசி:
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பல்வேறு வகையான ஊரடங்கு கட்டுபாடுகள் அமல்படுத்தப்பட்டாலும் தடுப்பூசி மருந்துகள் தான் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முக்கிய பங்கு வகிக்கிறது. இதனை தொடர்ந்து தற்போது இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்டு உள்ளிட்ட தடுப்பூசி மருந்துகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. முதலில் தடுப்பூசி மருந்துகள் 18 வயதிற்கு மேற்பட்ட வயதினருக்கு செலுத்தப்பட்டு வந்தது. இதையடுத்து 15 வயது மேற்பட்டவர்களுக்கும் செலுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
அதே போல் 60 வயதிற்கு மேற்பட்ட இணை நோய் அல்லாதவர்களும் தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து தற்போது அனைத்து வயதினருக்கும் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. மேலும் கொரோனா வைரஸ் பல்வேறு வகைகளில் உருமாற்றம் அடைந்து வருவதால் பூஸ்டர் தடுப்பூசியை செலுத்த அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள பயாலஜிக்கல் இ நிறுவனம் கோர்பேவாக்ஸ் தடுப்பூசியை தயாரித்துள்ளது. அத்துடன் இதனை பூஸ்ட்ர் டோஸ் தடுப்பூசியாக பயன்படுத்த இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதித்துள்ளது.
ரேஷன் அட்டைகளில் மொபைல் எண்ணை இணைப்பது எப்படி? வழிமுறைகள் இதோ!
இதனை 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் செலுத்தி கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இதனை 2 டோஸ் செலுத்தியவர்கள் பூஸ்ட்ர் டோஸ் தடுப்பூசியாக செலுத்தி கொள்ளலாம். இதையடுத்து தற்போது 5 முதல் 12 மற்றும் 12 முதல் 14 ஆகிய வயதினரும் இந்த தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இதற்கான விலை தனியார் மருத்துவமனை மற்றும் மையங்களில் ரூ.250 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் தற்போது இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.