ஜூன் 2வது வாரத்தில் பேருந்து சேவை தொடக்கம்? மாநகராட்சி திட்டம்!
நாசிக் நகரத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ளதால் மீண்டும் பேருந்து சேவை தொடங்க இருப்பதாக மாநகராட்சி நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பேருந்து சேவை:
மஹாராஷ்டிரா மாநிலத்தில் தொடர்ந்து கொரோனா பாதிப்புகள் குறைந்ர்து வருகிறது. இதனால் மாநிலத்தில் 5 கட்டங்களாக ஊரடங்கில் தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், நாசிக் நகரத்திலும் பாதிப்புகள் குறைந்து உள்ளதாக அரசு அறிக்கை தெரிவிக்கிறது. அதன்படி, நேற்று புதிதாக அங்கு 585 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
தொற்று குறைந்து வருவதால் அங்கு மீண்டும் நகரப் பேருந்துகளை இயக்குவது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு தேதி அறிவிக்கப்படும் என்று உள்ளாட்சித் துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். முதல்கட்டமாக 25 பேருந்துகள் மட்டுமே இயக்கப்படும். அதிலும் சாத்பூர் மற்றும் அம்பாத் ஆகிய இரண்டு பெரிய தொழில்நகரங்களுக்கு இடையிலான பேருந்துகள் சேவை வழங்கப்பட உள்ளதாக தெரிகிறது.
தமிழகத்தில் பத்திரிக்கையாளர்கள் முன்களப் பணியாளர்களே – அரசாணை வெளியீடு!
இந்த பேருந்து பயணத்திற்கான கட்டண விவரங்களை நாசிக்கின் ஆர்.டி.ஓ நிர்ணயித்து ஒப்புதல் அளித்துள்ளார். 2 கி.மீ தூரத்திற்கு ரூ.10 ம், அடுத்த ஒவ்வொரு கி.மீட்டருக்கும் தலா ரூ.2ம் வசூலிக்கப்படும். 18 கி.மீ தூரம் பயணம் செய்ய ரூ.30ம், 30 கி.மீ தூரம் பயணிக்க ரூ.45ம் செலுத்த வேண்டும் என்று கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.