தமிழக பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு – முதல்வரின் முக்கிய அறிவுரை!
தமிழகத்தில் 1 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் கல்வியாண்டு இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தமிழக முதல்வர் பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.
பள்ளிகள் திறப்பு
தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக அனைத்து மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. இந்த ஆண்டு கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து பொதுத்தேர்வுக்கான தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டது. அதன்படி அறிவித்தபடி 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடந்து முடிவடைந்துள்ளது. இதையடுத்து அனைத்து மாணவர்களுக்கும் கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த கல்வியாண்டு தாமதமாக விரைவில் தொடங்கப்பட வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை திட்டமிடப்பட்டது.
TN Job “FB Group” Join Now
அதன்படி 1 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 13ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 20ம் தேதி முதல் பள்ளிகள் தொடங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்று 11ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 27ம் தேதி அன்று அடுத்த கல்வியாண்டு தொடங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது. ஆனால் தற்போது தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் வேகமெடுத்து வருவதால் பள்ளி திறப்பு தள்ளி வைக்கப்படுமா என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால் திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை உறுதியளித்தது.
தமிழகத்தில் 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை அறிக்கை!
அதனால் பள்ளிகள் திறப்பதற்கான முன்னேற்பாடுகளை தீவிரமாக மேற்கொண்டது. அதன்படி தற்போது திட்டமிட்டப்படி 1 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரத்தை உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். அத்துடன் பள்ளி வளாகத்தில் உள்ள கழிவறை தொட்டிகள் சுத்தமாகவும் அத்துடன் மூடியிருப்பதாகவும் இருக்க வேண்டும். இதனை முறையாக கடைபிடிக்க வேண்டும் என்று முதல்வர் கேட்டு கொண்டுள்ளார்.