மத்திய அரசின் மாதம் ரூ.1000 கல்வித்தொகை வழங்கும் திட்டம் – விண்ணப்பங்கள் வரவேற்பு!
மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் பீடி, சுண்ணாம்புக்கல், டோலமைட் சுரங்கத் தொழிலாளர்கள் மற்றும் சினிமா தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
உதவித்தொகை விண்ணப்பங்கள்:
மத்திய அரசு ஏழை எளிய குழந்தைகள் படிப்பிற்காக பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் பீடி, சுண்ணாம்புக்கல், டோலமைட் சுரங்கத் தொழிலாளர்கள் மற்றும் சினிமா தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு 2022-23 ஆண்டிற்கான கல்வி உதவித்தொகை பெற மின்னணு முறையில் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
இந்த திட்டத்தின் படி 9-ம் வகுப்பு முதல் தொழில்முறை படிப்புகள் வரை பயிலும் குழந்தைகளுக்கு ரூ.1,000 முதல் ரூ.25 ஆயிரம் வரை உதவித்தொகை வழங்கப்படும். இந்த கல்வித்தொகை பெற https://scholarships.gov.in என்ற தேசிய கல்வி உதவித் தொகை இணையதள பக்கத்தில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். இந்த உதவித்தொகை பெற விண்ணப்பதாரர்களின் ஆதார் எண்ணை, சேமிப்பு வங்கிக் கணக்குடன் கட்டாயம் இணைந்திருக்க வேண்டும்.
தமிழகத்தில் நாளை மறுநாள் (ஜூலை 27) வேலைவாய்ப்பு முகாம் – முழு விவரம் இதோ!
மேலும் இந்த கல்வித்தொகை பெற விருப்பமுள்ளவர்கள் ஒன்று முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய கடைசி நாள் செப்டம்பர் 30 ஆம் தேதி என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மீதமுள்ள உயர்கல்வி மாணவர்களின் விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. படிக்க ஆசை உள்ள ஏழை எளிய மாணவர்கள் இந்த திட்டத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.