தமிழகம் உள்ளிட்ட 13 மாநிலங்களுக்கு மின்சாரம் வாங்க தடை – மத்திய அரசு அதிரடி!

0
தமிழகம் உள்ளிட்ட 13 மாநிலங்களுக்கு மின்சாரம் வாங்க தடை - மத்திய அரசு அதிரடி!
தமிழகம் உள்ளிட்ட 13 மாநிலங்களுக்கு மின்சாரம் வாங்க தடை - மத்திய அரசு அதிரடி!
தமிழகம் உள்ளிட்ட 13 மாநிலங்களுக்கு மின்சாரம் வாங்க தடை – மத்திய அரசு அதிரடி!

நிலுவை தொகையை செலுத்தாததால், தமிழகம், தெலுங்கானா, பீகார் உள்ளிட்ட 13 மாநிலங்கள் மின்சார வர்த்தகத்தில் ஈடுபட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் மீண்டும் தமிழ்நாட்டில் மின்சார பாதிப்பு ஏற்படலாம் என தகவல்கள் கூறுகின்றன.

மின்சாரம் வாங்க தடை:

மத்திய மின்சாரத்துறை அமைச்சகத்தின் கீழ் பவர் சிஸ்டம் ஆபரேஷன் கார்ப்பரேஷன் செயல்பட்டு வருகிறது. இதன் கீழ் செயல்படும் மின்சார உற்பத்தி நிறுவனங்கள் மூலம் மாநிலங்களில் உள்ள மின் வினியோக நிறுவனங்களுக்கு மின்சாரம் வழங்கப்படுகிறது. இதையடுத்து டிஸ்காம்ஸ் சார்பில் மின்சார உற்பத்தி நிறுவனங்கங்களுக்கு பணம் வழங்க வேண்டும். ஆனால் தற்போது பல மாநிலங்களில் உள்ள டிஸ்காம்ஸ் சார்பில் மின்சாரத்துக்கு பணம் செலுத்தாமல் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. ஆகையால் தமிழ்நாடு, தெலுங்கானா, ம.பி., மிசோரம், ஜார்க்கண்ட், பீகார், ராஜஸ்தான், ஆந்திரா, மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்கள் இன்று முதல் மின்சார வர்த்தகம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த 12 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசம் சார்பில் மொத்தம் ரூ.5 ஆயிரம் கோடி வரை பாக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மின் தடை அதிகரிக்க வாய்ப்புள்ளது.மின்சாரம் விநியோக நிறுவனங்கள் மற்றும் மின்சார உற்பத்தி நிறுவனங்கள் நிலுவைத் தொகையை செலுத்தாததற்காக மின் அமைச்சகத்தால் உருவாக்கப்பட்ட விதிகளின் விளைவாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதாவது புதிய லேட் பேமென்ட் சர்சார்ஜ் (எல்பிஎஸ்) விதிகளின் கீழ் இந்த நடவடிக்கை இன்று முதல் அமலுக்கு வரும்.

தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில் 16 மாவட்டங்களில் மழை பெய்யும் – வானிலை மையம் தகவல்!

அதாவது LPS விதிகள்படி, ஏழு மாதங்களுக்கும் மேலாக ஜென்கோஸுக்கு டிஸ்காம்கள் நிலுவை தொகையை செலுத்தாமல் இருந்தால் அவை மின்சார வர்த்தகத்தில் ஈடுபட முடியாது. இந்தச் செய்தி இந்திய எரிசக்தி பரிவர்த்தனையை (IEX) அழுத்தத்திற்கு உள்ளாக்கியது, ஏனெனில் IEX இல் வர்த்தகம் செய்யப்படும் அளவுகள் விரைவில் பாதிக்கப்படலாம். அதாவது தெலங்கானா அதிகபட்சமாக ரூ.1,380 கோடி பாக்கியும், தமிழ்நாடு ரூ.926.16 கோடி பாக்கியும், கர்நாடகா 355.2 கோடி, மகாராஷ்டிராவில் 381.66 கோடி பாக்கி வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!