Post Office-ல் குழந்தைகளுக்கான சிறந்த சேமிப்பு திட்டம் – பெற்றோர்கள் கவனத்திற்கு!!
இந்திய அஞ்சல் துறை பல்வேறு சேமிப்பு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அதில் ஆண் குழந்தைகளுக்கான மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள “பொன்மகன் சேமிப்பு திட்டம்” மூலமாக வைப்பு முதிர்வு தேதிக்கு முன்பாகவே பணம் பெற்றுக் கொள்ளும் வசதி தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பொன்மகன் சேமிப்பு திட்டம்
தற்போது கொரோனா கால கட்டத்தில் பொதுமக்கள் பல்வேறு இழப்புகளை சந்தித்து வருகின்றன. இதனால் தங்கள் குழந்தைகளுக்கு பாதுகாப்பான முதலீட்டில் கவனம் செலுத்தி வருகின்றன. அந்த வகையில் Post Office-ல் பல்வேறு சேமிப்பு திட்டங்கள் உள்ளன. தற்போது இருக்கும் சூழலில் சேமிப்பு மட்டுமே போதாது அதையும் தாண்டி நல்ல பலன் தரும் சில திட்டங்கள் இருக்கின்றன. கூடுதல் வட்டி மட்டுமின்றி உயர்கல்விக்கு கணிசமான தொகை கிடைக்க உதவும் திட்டங்கள் இருக்கின்றன. அதன்படி பப்ளிக் ப்ராவிடன்ட் பண்ட் திட்டம் மூலம் குழந்தைகளின் கல்விக்கு ஏற்ற ஒரு தொகை கிடைக்கும். இந்த திட்டம் 15 ஆண்டுகள் கொண்டது.
குழந்தைகளை குறி வைத்து தாக்கும் ஓமைக்ரான் பாதிப்பு – தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற அறிவுறுத்தல்!!
இத்திட்டத்தின் மூலம் 7.1 சதவீதம் வட்டி விகிதம் கிடைக்கிறது. மேலும் ரூ.1.5 லட்சம் வரை வருமான வரியின் 80சி பிரிவில் கீழ் வரிச் சலுகையும் இந்த திட்டத்தின் மூலம் பெற முடியும். தற்போது ஆண் குழந்தைகளுக்கான மத்திய அரசு “பொன்மகன் சேமிப்பு திட்டம்” ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலமாக வைப்பு முதிர்வு தேதிக்கு முன்பாகவே பணம் பெற்றுக்கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்திய அஞ்சல் துறை தான் இந்தத் திட்டத்தையும் செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டம் ஒவ்வொரு ஆண்டுக்கும் 12 முறை என குறைந்தபட்சம் ரூ.500 முதல் அதிகபட்சம் 1.5 லட்சம் ரூபாய் வரை சேமிப்பு தொகை செலுத்த முடியும்.
இந்த திட்டமானது ஏப்ரல் முதல் மார்ச் வரையிலான நிதியாண்டை அடிப்படையாகக் கொண்டுள்ளது. அத்துடன் 15 ஆண்டுகளுக்கு பணம் செலுத்த வேண்டும். இதன் மூலம் 8.1% வட்டி வழங்கப்படும். மேலும் இந்தத் திட்டத்தில் சேருவதற்கான வயது வரம்பு கிடையாது. அதற்கு அடுத்ததாக ஈக்விட்டி மியூச்சுவல் பண்ட்ஸ் நீண்ட காலத்திற்கு ஒரு சிறந்த முதலீடாகக் கருதப்படுகிறது. அதாவது முதன்மையான நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்ய முடியும். இதன் முதலீட்டாளர்கள் தனிப்பட்ட பத்திரங்களை வாங்குவதை விட இந்த திட்டம் மூலம் எளிதாக ஒரு கூடை பங்குகளை வாங்கலாம்.