முல்லைக்கு குழந்தை பிறக்கும் அழகான தருணம் – “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் இனி வருபவை!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் பல முயற்சிகளுக்கு பின்னர் கூட முல்லை கர்ப்பமாக இல்லாமல் இருக்கிறார். அதனால் குடும்பமே வருத்தத்தில் இருக்கின்றனர். ஆனால் இனி வரும் எபிசோடுகளில் முல்லை கர்ப்பமாகி அவருக்கு குழந்தை பிறக்கும் அந்த தருணம் குறித்த ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் பணக் கஷ்டம் இருந்தாலும் அதை எல்லாம் தாண்டி அண்ணன் தம்பிகள் ஒற்றுமையுடன் இருந்து வருகின்றனர். கஷ்டப்பட்டு முன்னேறி தங்களது சிறிய மளிகை கடையை இப்போது பெரிய சூப்பர் மார்கெட்டாக மாற்றி இருக்கின்றனர். அந்த ஒரு கடையை நம்பியே முழு குடும்பமும் இருக்கின்றனர். இந்நிலையில் சந்தோசமாக சென்று கொண்டிருந்த குடும்பத்தில் முல்லைக்கு குழந்தை இல்லை என்ற குறை பெரிதாக இருக்கிறது.
Exams Daily Mobile App Download
முல்லை அதை நினைத்து தன்னை தானே வருத்திக் கொள்கிறார். அதனால் பல இடங்களில் கடன் வாங்கி மூர்த்தி முல்லைக்கு டிரீட்மென்ட் செய்ய முடிவு செய்கின்றனர். நல்லபடியாக டிரீட்மென்ட் முடிய முல்லை இப்பவே கர்பமாகிவிட்டது போல நினைத்து சந்தோசமாக இருக்கிறார். ஆனால் அதெல்லாம் வெறும் கனவாக மாறிவிடுகிறது. அதனால் முல்லை மிகவும் மனம் உடைந்து போகிறார். இனிமேல் டிரீட்மென்ட் செய்ய பண வசதியும் இல்லாமல் இருக்கிறது.
அதனால் முல்லை மனம் வருத்தப்பட கூடாது என்பதால் அனைவரும் சென்னைக்கு சென்று இருக்கின்றனர். இந்நிலையில் இனி வரும் எபிசோடுகளில் டிரீட்மென்ட் பார்க்காமல் முல்லை கர்ப்பமாக போகிறார். அதை நினைத்து குடும்பத்தில் அனைவரும் சந்தோசமாக இருக்கின்றனர். மேலும் முல்லைக்கு நல்லபடியாக குழந்தை பிறக்க போகிறது. அந்த அழகான தருணம் குறித்த ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. ஆனால் இது எடிட் செய்யப்பட்ட ப்ரோமோவாக இருந்தாலும் ரசிகர்கள் மனதை இந்த ப்ரோமோ கவர்ந்து இருக்கிறது.