சென்னையில் வணிக வளாகங்கள், கடைகளை திறக்க தடை – ஆகஸ்ட் 9 வரை அமல்!

0
சென்னையில் வணிக வளாகங்கள், கடைகளை திறக்க தடை - ஆகஸ்ட் 9 வரை அமல்!
சென்னையில் வணிக வளாகங்கள், கடைகளை திறக்க தடை - ஆகஸ்ட் 9 வரை அமல்!
சென்னையில் வணிக வளாகங்கள், கடைகளை திறக்க தடை – ஆகஸ்ட் 9 வரை அமல்!

சென்னையில் கொரோனா மூன்றாம் அலையை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆகஸ்ட் 9 ஆம் தேதி வரை மக்கள் கூட்டம் அதிகமாக உள்ள 9 இடங்களில் உள்ள கடைகள், வணிக வளாகங்களை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

கடைகள் அடைப்பு:

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டது. மக்கள் பலர் ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக தங்களது வருமானத்தை இழந்து தவித்து வருகின்றனர். இந்நிலையில் அரசின் நடவடிக்கை மற்றும் தடுப்பூசி போடும் பணிகள் காரணமாக கொரோனா பரவல் தற்போது கட்டுப்பாட்டிற்குள் வந்து கணிசமாக குறைந்துள்ளது. இதனால் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. அனைத்து கடைகளும் இரவு 9 மணி வரை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் மாவட்டத்திற்குள் பொது போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

செழியனிடம் குழந்தை பற்றி கேட்கும் ஜெனி, கண்டபடி திட்டும் செழியன் – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!!

இந்நிலையில் அடுத்து செப்டம்பர் மாதத்தில் கொரோனா மூன்றாம் அலை பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் எனவும், கொரோனா கட்டுப்பாடு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை மாநகராட்சி சார்பில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கையாக 9 இடங்களில் கடைகள், வணிக வளாகங்கள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவு இன்று முதல் ஆகஸ்ட் 9 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ள ரங்கநாதன் தெரு சந்திப்பில் வடக்கு உஸ்மான் சாலை முதல் மாம்பலம் ரயில் நிலையம் வரை, புரசைவாக்கம் டவுட்டன் சந்திப்பு முதல் புருக்லின் சாலை வரை, ஜாம் பஜார் பாரதி சாலை ரத்னா கஃபே சந்திப்பு முதல் பெல்ஸ் சாலை சந்திப்பு வரை கடைகள் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

கண்ணனை அடிக்கும் மூர்த்தி, வீட்டை விட்டு வெளியே வரும் ஐஸ்வர்யா – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!!

மேலும் ஃபக்கி சாஹிப் தெரு, அபிபுல்லா தெரு, புலிபோன் பஜார், என்.எஸ்.சி போஸ் சாலையில் குறளகம் முதல் தங்க சாலை சந்திப்பு வரை, ராயுபுரம் மார்க்கெட் பகுதியில் கல்மண்டபம் சாலை, வாட்டர் டேங்க் முதல் காமாட்சி அம்மன் கோவில் வரை, அமைந்தகரை மார்க்கெட் பகுதியில் பூந்தமல்லி நெடுஞ்சாலை அமைந்தகரை காவல் உதவி மையம் முதல் புல்லா அவென்யூ திரு.வி.க.நகர் பூங்கா சந்திப்பு வரை மற்றும் ரெட்ஹில்ஸ் மார்க்கெட் பகுதியில் ஆஞ்சநேயர் சிலை முதல் அம்பேத்கர் சிலை வரை உள்ள வணிக வளாகங்கள், கடைகள் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், கொத்தவால்சாவடி மார்க்கெட் நாளை முதல் ஆகஸ்ட் 9 ஆம் தேதி காலை 6 மணி வரை செயல்பட அனுமதி இல்லை என வணிகர் சங்க பிரதிநிதிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!