மகாலட்சுமி வந்த நேரம் ரவீந்தர் வாழ்க்கையில் ஏற்பட்ட எதிர்பாராத திருப்பம் – அவரே வெளியிட்ட பதிவு!
கடந்த சில வாரங்களாக சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்ட கன்டென்டாக இருப்பது ரவீந்தர் மகாலட்சுமி திருமணம் தான். இந்நிலையில் மகாலட்சுமி தனது வாழ்க்கையில் வந்த பின் சந்தோசமான நிகழ்வு ஒன்று நடந்திருப்பதாக, ரவீந்தர் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
ரவீந்தர்-மஹாலட்சுமி ஜோடி:
சின்னத்திரையில் பிக்பாஸ் நிகழ்ச்சியை பற்றிய கருத்துக்களை சொல்லி பிரபலமானவர் தயாரிப்பாளர் ரவீந்தர். அதன் பின் வனிதா பீட்டர் பால் பற்றி பேசியே சமூக வலைத்தளங்களில் கன்டென்டாக மாறினார். இந்நிலையில், அதன் பின் கன்டென்ட் இல்லாமல் இருந்த நெட்டிசன்களுக்கு கடந்த மாதம் கன்டென்ட்டாக இருந்தது, ரவீந்தர் மகாலட்சுமியின் காதல் கல்யாணம் தான். திருப்பதியில் நடந்து முடிந்த அவர்களின் திருமண புகைப்படங்களை பார்த்து, மற்ற மொழி பத்திரிகைகள் கூட விமர்சனம் செய்தது.
இந்நிலையில் விஜய் டிவியில் சென்ற ஞாயிற்றுக் கிழமை வந்தால் மகாலட்சுமியே என்ற ஷோ நடத்தி, ரவீந்தர் மகாலக்ஷ்மியின் காதல் வாழ்க்கைக்கு ஏகப்பட்ட வாழ்த்துக்களை ரசிகர்கள் தெரிவித்தனர். காதலுக்கு உருவம் முக்கியம் இல்லை என்பதற்கு அந்த ஜோடி எடுத்துக்காட்டாய் இருந்தாலும், மறுபக்கம் பணம் இருந்தால் எதுவும் முக்கியம் இல்லை தான் என ஒரு பக்கம் நெகட்டிவ் கமெண்ட்களும் வந்து கொண்டே தான் இருக்கிறது. அந்த நெகட்டிவ் கமெண்ட்களுக்கு தங்களது சந்தோசமான வாழ்க்கை மூலமாகவே இந்த ஜோடி பதிலடி கொடுத்து இருக்கிறது.
நடக்குமா கோபி- ராதிகா திருமணம்? நிறுத்த போகும் அந்த நபர் யார்? சீரியலில் வர போகும் திடீர் திருப்பம்!
Exams Daily Mobile App Download
அந்த வகையில் தனது ஆசை காதல் மனைவி மகாலட்சுமி வந்த நேரம், எல்லாம் நல்லபடியாக நடப்பதாக ரவீந்தர் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் கலைமாமணி ஞான சம்பந்தம் சாருடன் என் முதல் பட்டிமன்றம். என் அணி வென்றது. என் பேச்சுக்கு நிறைய பாராட்டு கிடைத்தது. என் அம்மாவின் ஆசி மற்றும் பொண்டாட்டியின் வாழ்த்துக்கள் தான் காரணம் என பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். இவரின் இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்