உச்சநீதிமன்றத்தின் 50வது தலைமை நீதிபதி ‘சந்திரசூட்’ – வெளியான தகவல்!
தற்போதைய உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக யு.யு.லலித் பதவி வகித்து வருகிறார். இப்போது இவரின் பதவிக்காலம் முடிவு பெற உள்ளதால் அடுத்ததாக உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதிக்கான பரிந்துரைகளை ஒன்றிய அரசு கொலிஜியத்திடம் சமர்ப்பிக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி
இந்தியாவில் தற்போது உச்ச நீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளை நீதிபதிகளே தேர்வு செய்யும் கொலிஜியம் என்ற நடைமுறையானது பின்பற்றப்பட்டு வருகிறது. அதாவது நீதிபதிகள் தேர்வுக்குழுவில் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான உயர் நீதிமன்ற கொலிஜியமும் மற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான உச்ச நீதிமன்ற கொலிஜியமும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கொலிஜியத்திடம் இருந்து தலைமை நீதிபதிகளை தேர்வு செய்வதற்கான பரிந்துரை பட்டியலானது ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும்.
தமிழகத்தில் ஆன்லைன் விளையாட்டுகள் தடை குறித்த அவசர சட்டம் – ஆளுநர் ஒப்புதல்!
அதன்பின்பு ஒன்றிய அரசு இந்த பட்டியலை இறுதி செய்து குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்படும். இதையடுத்து குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்த பிறகு நீதிபதி குடியரசு தலைவரால் நியமனம் செய்யப்படுவார். இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 27ம் தேதி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக யு.யு.லலித் பொறுப்பெற்றார். தற்போது அவரின் பதவி காலமானது வருகிற நவம்பர் 8ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. அதனால் அடுத்த தலைமை நீதிபதியை நியமனம் செய்வதற்கான பணியில் ஒன்றிய அரசு இறங்கியுள்ளது.
Exams Daily Mobile App Download
அதன்படி தற்போது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு.லலித்திடம் பறித்துரைக்கான பட்டியலை சமர்ப்பிக்குமாறு ஒன்றிய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. அதனால் இந்த கொலிஜியம் தேர்வு குழு ஆலோசனை மேற்கொண்டு உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதிக்கான பரிந்துரை விவரங்களை ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைக்கும். இந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தின் 50வது தலைமை நீதிபதியாக உச்சநீதிமன்ற மூத்த நீதிபதியான சந்திரசூட் என்பவர் தேர்வு செய்யப்படுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்