நீரஜ் சோப்ரா உள்ளிட்ட 14 பேருக்கு ‘தயான் சந்த் கேல் ரத்னா’ விருது – குடியரசுத் தலைவர் வழங்கல்!
டோக்கியோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா உட்பட 14 பேருக்கு இந்திய அரசின் கேல் ரத்னா விருது குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களால் டெல்லியில் இன்று வழங்கப்பட்டது.
தயான் சந்த் கேல் ரத்னா விருது:
இந்தியாவில் விளையாட்டுக்களில் சிறப்புமிகு வாழ்நாள் சாதனை நிகழ்த்தியவர்களுக்கு இந்திய அரசால் வழங்கப்படும் உயரிய விருது தான் தயான் சந்த் கேல் ரத்னா விருது. புகழ்பெற்ற ஹாக்கி வீரரான தயான் சந்த் நினைவாக 2002 ஆம் ஆண்டு இந்த விருது நிறுவப்பட்டது. இவ்விருது பெற்றோருக்கு இந்திய ரூபாய் மதிப்பில் ரூபாய் ஐந்து லட்சம் ரொக்கப்பரிசு, ஓர் பாராட்டு சான்றிதழ், சிலை மற்றும் அலங்கார உடையும் வழங்கப்படுகிறது. இந்த நடப்பு ஆண்டிற்கான விருதிற்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் பட்டியல் முன்னதாக வெளியிடப்பட்டது.
‘வாடிக்கையாளர்களை நல்ல முறையில் நடத்தவும்’ – SBI அதிகாரிகளுக்கு குட்டு வைத்த நீதிமன்றம்!
இந்நிலையில், இன்று இந்த ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விருது வழங்கும் விழா டெல்லி குடியரசுத்தலைவர் மாளிகையில் நடைபெற்றது. விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் விருதுகளை வழங்கினார். அதில், டோக்கியோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா உட்பட 14 பேருக்கு கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது. அதில், பிரமோத் போகத் (பாரா-பேட்மிண்டன்), மிதாலி ராஜ் (கிரிக்கெட்), சுனில் சேத்ரி (கால்பந்து), மன்பிரீத் சிங் (ஹாக்கி) ஆகியோருக்கும் கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது.
தேசிய வேலை உறுதி திட்ட தொழிலாளர்களுக்கு ஊதியம் – ரூ.47.16 கோடி ரூபாய் விடுவிப்பு!
மேலும், இதேபோல், மல்யுத்த வீரர் ரவிக்குமார், குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினா போர்கோஹைன், ஹாக்கி வீரர் ஸ்ரீஜேஷ், பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை (துப்பாக்கி சுடும் போட்டி) அவனி லெகாரா, பாரா- தடகள வீரர் சுமித் அன்டில் ஆகியோரும் தயான் சந்த் கேல் ரத்னா விருதினை பெற்றனர். விருது பெற்றவர்களை குடியரசுத் தலைவர் பாராட்டி, தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.