அரசு பள்ளியில் மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதி – பெற்றோர்கள் அதிர்ச்சி!!
கொரோனா பாதிப்பு:
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா தொற்றின் தாக்கம் உள்ளது. மிகவும் வேகமாக கொரோனா நோய் பரவி வந்த காரணத்தால் மாநிலம் முழுவதும் மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளும் மூடப்பட்டிருந்தது.
பொறியியல் படிப்புகளுக்கு கணிதம், இயற்பியல் பாடங்கள் அவசியம் – ஏஐசிடிஇ அறிவிப்பு!!
மாணவர்களின் பாதிப்பு:
பள்ளிகள் வழக்கம் போல் செயல்படாத காரணத்தால் மாணவர்களுக்கு பாடங்கள் அனைத்தும் ஆன்லைன் முறையில் கற்பிக்கப்பட்டது. இதனால் மாணவர்களின் கற்றல் பாதிப்புக்கு உள்ளானது. பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள மாணவர்களால் ஆன்லைன் பாடங்களை கற்க முடியவில்லை. இந்நிலையில் தொற்றின் தாக்கம் சற்று குறைந்திருந்த காரணத்தால் கடந்த ஜனவரி 19ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டது.
பள்ளிகள் திறப்பு எதிரொலி:
பள்ளிகள் திறக்கப்பட்டாலும் தகுந்த நோய்த்தடுப்பு நடவடிக்கைளை பள்ளிகள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், தஞ்சாவூர் பாபநாசம் அருகே உள்ள அம்மாபேட்டை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு மாணவிகளுக்கு இன்று வகுப்பு நேரத்தில் உடல்நிலை பாதிப்படைந்திருப்பதை அறிந்த பள்ளி நிர்வாகம் சோதித்து பார்த்ததில் 20 மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாணவிகளின் குடும்பத்தினரும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, பள்ளியும் மூடப்பட்டுள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்