திருமணத்தில் ஒதுக்கப்படும் மாப்பிள்ளை வீட்டார், வருத்தத்தில் கோதை – இன்றைய “தமிழும் சரஸ்வதியும்” எபிசோட்!
விஜய் டிவி “தமிழும் சரஸ்வதியும்” சீரியலில், தமிழை திருமணம் செய்ய முடியாது என சொன்ன மது வருகிறார். அவரை பார்த்து தமிழ் உன் மீது கோவம் எதுவும் இல்லை என சொல்கிறார். சந்திரலேகா திருமண மேடையில் கோதை குடும்பத்தை அவமானம் படுத்துகிறார்.
தமிழும் சரஸ்வதியும்:
இன்று “தமிழும் சரஸ்வதியும் சீரியலில், தமிழ் கோட் சூட் உடன் வந்து நிற்க சரஸ்வதி பார்த்து சந்தோசப்படுகிறார். அப்போது தமிழை திருமணம் செய்ய வேண்டாம் என சொன்ன மது வருகிறார். அவர் சோகமாக வந்து நிற்க, தமிழ் சென்று எனக்கு உன் மீது கோவம் எதுவும் இல்லை என சொல்கிறார். பின் மின்னல் அவளை பார்த்து கோவப்பட, சரஸ்வதி அவள் செய்தது நல்லது தான் அதுனால தான் தமிழ் எனக்கு கிடைத்திருக்கார் என சொல்கிறார்.
‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் அஞ்சலியை கொலை செய்ய முயற்சிக்கும் வெண்பா – அடுத்த ட்விஸ்டு!
பின் ஆடல் பாடலுடன் பொண்ணு மாப்பிள்ளையை அழைத்து வருகின்றனர். அப்போது சரஸ்வதி மின்னல் நடனம் ஆட, லேகா அதை பார்த்து கோபப்படுகிறார். பின் மாப்பிள்ளை பொண்ணு மேடையில் நிற்க மாப்பிள்ளை வீட்டில் இருப்பவர்களை விட்டு சந்திரலேகா அழைத்து வந்தவர்களை வைத்து போட்டோ எடுக்கின்றனர். வேண்டுமென்றே இப்படி செய்வதை புரிந்து கொண்ட கோதை தமிழிடம் சொல்லி திட்டம் ஒன்றை தீட்டுகிறார். அதில் முதலில் பெண் வீட்டார் போட்டோ எடுக்க, பின் மாப்பிள்ளை வீட்டார் போட்டோ எடுக்கலாம் என சொல்கின்றனர்.
தமிழகத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் இரண்டு நாட்கள் தொடர் விடுமுறை – பள்ளிக்கல்வி துறை அறிவிப்பு!
அதை பார்த்ததும் லேகா அதிர்ச்சி அடைகிறார். மறுபக்கம் லேகா நடந்து கொள்வதை பார்த்து சரஸ்வதியும் மின்னலும் அதிர்ச்சியில் இருக்கின்றனர். சாப்பிடும் இடத்தில் பேக்டரியில் வேலை செய்யும் ஒருவர் அமர்ந்திருக்க லேகா வந்து எந்திரிக்க சொல்கிறார். அவர் வருத்தத்துடன் கோதையிடம் பேச கோதை என்ன செய்வது என தெரியாமல் வருத்தத்தில் இருக்கிறார். எப்படியாவது கோதையை சிரிக்க வைக்க வேண்டும் என நினைத்து கோதையை பாட்டு பாட சொல்கிறார். அவர் மிகவும் அருமையாக பாடுகிறார்கள். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.