உயிருக்கு ஆபத்தான நிலையில் கோதை, பரிதவிக்கும் தமிழ், சரஸ்வதி – சீரியலில் அடுத்து நடக்கப்போவது என்ன?
விஜய் டிவியின் சீரியல்களில் தற்போது மிகவும் விறுவிறுப்பாக செல்லும் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் உடல் நிலை மிகவும் மோசமான நிலையில் இருக்கும் கோதையின் முடிவு குறித்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கோதையின் முடிவு:
தன் அண்ணன் மகள் தமிழ் படிக்கவில்லை என்ற காரணத்தால் அவரை திருமணம் செய்து கொள்ள மறுத்து விடுகிறாள் என்ற காரணத்தால், அவளை விட படித்த பெண்ணை தான் தன் மகனுக்கு திருமணம் செய்து வைப்பேன் என்று தமிழின் அம்மா கோதை சபதம் எடுக்கிறார். இதனால் நன்றாக படித்த பெண்ணாக தமிழுக்கு தேடுகிறார்கள். அப்போது தான் சரஸ்வதியின் அறிமுகம் கிடைக்கிறது. அனைவரும் படித்து நல்ல நிலையில் இருக்கும் சரஸ்வதியின் குடும்பத்தில் சரஸ்வதிக்கு மட்டும் படிப்பு ஏறவில்லை.
ஹிஜாப் பிரச்சனைக்கு பதிலடி கொடுத்த ‘பாரதி கண்ணம்மா’ பரினா – ரசிகர்கள் ஷாக்!
12ம் வகுப்பு பெயில் ஆகி, பல முறை தேர்வு எழுதி வருகிறார். ஆனால் பலன் ஏதும் இல்லை. இதனால் சரஸ்வதியின் அப்பாவிற்கு அவள் மேல் கோவம் இருக்கிறது. இந்நிலையில், தமிழும், சரஸ்வதியும் கோயிலில் அறிமுகம் ஆகி, பின்னர் காதலிக்க தொடங்குகின்றனர். சரஸ்வதியை கோதைக்கும் பிடித்து விடுகிறது. ஆனால் சரஸ்வதி MBA படித்திருப்பதாக தவறாக நினைத்து கொள்கிறார். இதனால் தமிழுக்கு சரஸ்வதியை திருமணம் நினைக்கிறார்.
‘நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியலில் இணையும் புதிய பிரபலம் – இனி கதை வேற ட்ராக் தான்!
முதலில் சரஸ்வதியின் அப்பா பொய் சொல்ல மறுக்கிறார். ஆனால் பாட்டி வலுக்கட்டாயமாக பொய் சொல்ல வைக்கிறார். இதனால் வேறுவழியில்லாமல் பொய் சொல்கிறார். இதை அனைத்தையும் சந்திரகலா திருமணம் முடிந்த பிறகு கோதையிடம் சொல்லி விடுகிறார். இதனால் தனது சபதத்தில் தான் தோற்று விட்டதாக கோதை மயங்கி விழுகிறார். அவரை மருத்துவமனையில் சேர்க்கின்றனர். விரைவில் கண் விழிக்க உள்ள கோதை தமிழையும், சரஸ்வதியையும் ஏற்றுக் கொள்வாரா அல்லது அதிக கோவம் அடைவரா என்பது போன்ற காட்சிகள் இனி வரும் எபிசோடுகளில் தான் வர உள்ளது.