தாலி கட்டும் நேரத்தில் நின்று விடும் தமிழ் & சரஸ்வதி திருமணம், கோதை தான் காரணமா? அடுத்த வார எபிசோட்!
விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் ‘தமிழும் சரஸ்வதியும்’ சீரியலில் இந்த வாரம் நடைபெற இருக்கும் எபிசோட் பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளது. அதில் திருமணம் நிறுத்தப்பட இருப்பது போல காட்டப்பட்டுள்ளது.
‘தமிழும் சரஸ்வதியும்’ சீரியல்
விஜய் டிவியில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் புதிய நெடுந்தொடராக அறிமுகமான சீரியல் தான், ‘தமிழும் சரஸ்வதியும்’ சீரியல். படிக்காத கதாநாயகனாக வரும் தமிழுக்கு அவரது அம்மா கோதை மெத்த படித்த பெண்ணை தான் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று முடிவு எடுக்கிறார். ஆனால், தமிழ் சரஸ்வதி என்ற பெண்ணுடன் காதல் வயப்பட்டு விடுகிறார். சரஸ்வதி தமிழை போலவே படிக்காத பெண் தான். சரஸ்வதியை தமிழின் குடும்பத்தினர் அனைவருக்கும் பிடித்து விடுகிறது.
விவாகரத்து பத்திரத்துடன் வந்த கோபி, குங்குமம் வைக்க சொன்ன பாக்கியா – சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!
ஆனால், அவர் படிக்கவில்லை என்ற செய்தி தமிழின் குடும்பத்தினருக்கு தெரியாது. ஆனால், வசுந்தராவின் அம்மாவான சந்த்ரகலாவிற்கு தெரியும். எப்படியாவது தமிழ் மற்றும் சரஸ்வதி இருவரது திருமணத்தையும் நிறுத்தி விட வேண்டும் என்று அவர் முழு மூச்சாக இருக்கிறார். அதற்கான வேலைகளிலும் இறங்குகிறார். இது ஒரு புறம் இருக்க, இனி அடுத்த வாரம் நடைபெற இருக்கும் எபிசோட் பற்றிய தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழக Post Office ல் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – முழு விவரம் இதோ!
அதன்படி, தமிழ் மற்றும் சரஸ்வதி இருவரது திருமணத்தின் போது தமிழின் அம்மா கோதை மயங்கி விழுந்து விடுவாராம். அதுவும் குறிப்பாக தமிழ் சரஸ்வதிக்கு தாலி கட்டும் போது மயக்கம் போட்டு விடுவாராம். இதனால் திருமணம் நின்று விடுகிறது. பின்னர், கோதையை அனைவரும் மருத்துவமனைக்கு அழைத்து செல்கின்றனர். கோதையின் நிலையை பார்த்து குடும்பத்தினர் அனைவரும் கவலை அடைந்து விடுகின்றனர்.