சரஸ்வதிக்கு திருட்டு பட்டம் கட்டி வீட்டை விட்டு வெளியே அனுப்பும் அப்பா – இன்றைய எபிசோட்!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “தமிழும் சரஸ்வதியும்” சீரியலில் இன்று தமிழின் தந்தை சரஸ்வதியை தான் கார்த்தி காதலிக்கிறார் என்று தவறாக புரிந்து கொள்கிறார். பின்னர், சரஸ்வதி கோதையிடம் திருமணம் பற்றி பேசுவதற்கு ஐடியா கொடுக்கிறார்.
“தமிழும் சரஸ்வதியும்” சீரியல்:
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் “தமிழும் சரஸ்வதியும்” சீரியலில் இன்று தமிழ் செல்லும் அதே ஹோட்டலுக்கு சரஸ்வதி தனது தங்கை மற்றும் தோழியுடன் வருகிறார். தமிழை பார்த்ததும் சரஸ்வதி அவரிடம் செய்கையில் பேசுகிறார். இதனை பார்த்து விடும் தமிழின் தந்தை தவறாக புரிந்து கொண்டு சரஸ்வதியிடம் சண்டை போடுகிறார். இதனால் குழப்பம் அடைந்து விடும் சரஸ்வதி தமிழிடம் இதற்கான விளக்கத்தினை கேட்கிறார். பின், தமிழ் சரஸ்வதி மற்றும் தனது தந்தை அனைவருக்கும் கார்த்தி பற்றி விளக்குகிறார்.
தமிழக தனியார் மருத்துவமனைகளில் இலவச கொரோனா தடுப்பூசி – முதல்வர் தொடக்கி வைப்பு!
தமிழ் மற்றும் அவரது குடும்பத்தினர் கார்த்தி விஷயத்தை எவ்வாறு கோதையிடம் எடுத்துரைப்பது என்று பேசிக்கொண்டுள்ளனர். அதனை கேட்கும் சரஸ்வதி, கோதைக்கு காதல் பிடிக்காது என்பதால், அவரிடம் காதல் பற்றி கூற வேண்டாம் என்றும், எதார்த்தமாக பெண் பார்த்ததாகவும், அதனால் அவரை கார்த்திக்கு திருமணம் செய்து விடலாம் என்று கூறுமாறும் கூறுகிறார். இந்த ஐடியா நன்றாக இருப்பதால் அதனையே செய்து விடலாம் என்று தமிழின் தந்தையும் சரி என்று கூறி விடுகிறார். பின், கிளம்பும் போது சரஸ்வதி தமிழிடம் சொல்லி விட்டு கிளம்புகிறார். அப்போது மழை பெய்கிறது. இதனால் தமிழ் சந்தோசம் அடைந்து விடுகிறார்.
பின், சரஸ்வதி காவியாவுடன் பீச் செல்கிறார். இதனை செல்பி எடுக்கும் அவரது தோழி அதனை பேஸ்புக்கில் பதிவிடுகிறார். பின், சரஸ்வதி மற்றும் காவியா இருவரும் ஒன்றும் தெரியாதது போல வீட்டிற்கு வருகின்றனர். அப்போது லிங்கம் வீட்டில் 3000 ரூபாய் காணவில்லை என்று தேடுகின்றனர். சரஸ்வதி வந்ததும் அவர் தான் பணத்தினை திருடி இருப்பார் என்று கூறுகின்றனர். அப்போது சரஸ்வதியின் தம்பி மூவரும் எடுத்துக் கொண்ட போட்டோக்களை வீட்டினரிடம் காட்டுகிறார். இதனை பார்த்து லிங்கம், அவரது மனைவி மற்றும் பாட்டி அனைவரும் அதிர்ச்சி அடைந்து விடுகின்றனர்.
TN Job “FB Group” Join Now
இதனை பார்த்து கோபம் அடையும் லிங்கம் சரஸ்வதியை வீட்டை விட்டே வெளியே அனுப்புகிறார். தனது குடும்பத்தினரின் ஒதுக்கம் தாளாமல் சரஸ்வதி அழுது கொண்டே வீட்டின் வெளியே நிற்கிறார். அப்போது மழை பெய்கிறது. இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைந்து விடுகிறது.
“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல் விடீயோவை பார்க்க கிளிக் பண்ணுங்க!!